”மாய மாளிகை ” மனம் திறக்கும் இயக்குநர்!

தேவா கிரியேஷன்ஸ் மற்றும் நவகிரஹா சினி ஆர்ட்ஸ் என்ற இரண்டு பட நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள படம் ” மாயமாளிகை ”

 K.N.பைஜூ கதை, திரைக்கதை எழுதி,இயக்கி  கதாநாயகனாக நடிக்கிறார்.நாயகிகளாக இரண்டு புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ்கான், கேசவ தேவ், கஞ்சா கருப்பு, சம்பத்ராம், முத்துக்காளை ஆகியோர் நடித்துள்ளனர். மற்றும் இவர்களுடன்  பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்

இசை – அஜெய் ஸரிகமா

பாடல்கள்  –  சினேகன்

கலை  – பிஜு தாஸ்

துணை இயக்கம் – ஜெயராஜ்

இணை இயக்கம்  – வி.பி.சுந்தர்

மக்கள் தொடர்பு  – மணவை புவன்

தயாரிப்பு  –  A.P.கேசவ தேவ்

கதை, திரைக்கதை, இயக்கம்  – K.N.பைஜூ

திருமணமான நாயகன், நாயகி இருவரும் தேனிலவுக்கு மலை பிரதேசத்தில் தங்களுக்கு சொந்தமான 10 ஏக்கரில் இருக்கும் பங்களாவிற்கு செல்கிறார்கள்.

அங்கே போனவுடன் சில திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கின்றன.

அங்கே இருக்கும் பேய் அந்த தம்பதிகளிடம் 40 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை சொல்கிறது. அந்த சம்பவத்திற்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் திரைக்கதை.

முதல் பாதி முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாகவும், இரண்டாவது பாதி காதல் கலந்த ஹாரராகவும் இருக்கும். வழக்கமான பேய் படங்களை போல் இல்லாமல் ஒரு வித்யாசமான முயற்சியை இந்த படத்தில் கையாண்டிருக்கிறோம் எனறார் இயக்குநர், நடிகர் K.N பைஜூ. நிச்சியமாக இந்தப் படம் மக்களிடம் வரவேற்பை பெற்றுத்தரும் என்றனர் படகுழு. மேலும் இந்த படத்தில் ரியாஸ்கான் காமெடியானாக நடித்திருப்பது குறிப்பிடதக்கது.

-யாழினி சோமு

Related Posts