ட்ராமா: திரைப்பட விமர்சனம்

ட்ராமா: திரைப்பட விமர்சனம்

மூன்று வெவ்வேறு சம்பவங்களின் க்ரைம் முடிச்சுகளை ஒருசேர அவிழ்த்து அதிர்ச்சி அளிக்கும் ஆந்தாலாஜி கதை.

இரண்டு திருடர்கள் சேர்ந்து, கார் ஒன்றை கடத்துகிறார்கள். வழியில் போலீஸ் சோதனையில் கார் சிக்க.. டிக்கியை திறந்து பார்த்தால் ஒரு இளைஞனின் பிணம்…

காவல் அதிகாரி விசாரிக்க ஆரம்பிக்கிறார் அதன் பிறகு நடக்கும் அதிரடி த்ரில் சம்பவங்களே கதை.

விவேக் ப்ரசன்னா – சாந்தினி தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் விவேக் ப்ரசன்னா, இறுதி முயற்சியாக ஒரு மருத்துவரிடம் மருந்து வாங்கி சாப்பிடுகிறார்.. சாந்தினி கர்ப்பமாகிறார்… அந்த நேரத்தில் ஒரு மர்ம போன் வந்து அவரை அலற வைக்கிறது..

ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்துவின் மகள் பூர்ணிமா தேவி, தனது காதலனை ‘பார்க்கக்கூடாத’ நிலையில் பார்த்து அதிர்கிறார்..

பிரதீப் கே விஜயன் மருத்துவர் என்கிற போர்வையில் விபரீத வேலைகளில் ஈடுபடுகிறார்…

இந்த மூன்று கதைகளைத்தான் ஒரே முடிச்சில் இணைத்து இருக்கிறார் இயக்குநர்.

விவேக் ப்ரசன்னா வழக்கம்போல சிறப்பாக நடித்து உள்ளார். குழந்தை இல்லாத ஏக்கம்… தன்னிடம்தான் குறை இருக்கிறது என்பதை மனைவியிடம் மறைத்த குற்ற உணர்வு.. இறுதியில் தன் தவறை கொட்டித் தீர்க்கும் இடம்.. என அருமையான நடிப்பு.

அவர் மனைவியாக வரும் சாந்தினியும் இயல்பாக நடித்து இருக்கிறார். பிள்ளை இல்லாத கவலை, கர்ப்பமானதும் உற்சாகம், மர்ம போன் வந்த பிறகு அடையும் அதிர்ச்சி… என அசத்துகிறார்.

இவர்களின் குடும்ப நண்பராக வரும் அனந்த் நாக் கவனத்தை ஈர்க்கிறார்.

பூர்ணிமா தேவி, ஏமாற்றப்பட்ட நிஜ காதலியை கண் முன் நிறுத்துகிறார். காதல் காட்சியில் மட்டுமல்ல.. இறுதியில் காதலனின் நடத்தையை அறிந்து பொங்கும் காட்சியிலும் சிறப்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தி உள்ளார்.

நல்ல காதலன்.. மோசமான வில்லன் என ஒரே கதாபாத்திரத்தில் இருவேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தி கவன்தை ஈர்க்கிறார் பிரதோஷ்.

போலீஸ் அதிகாரியாக வரும் சஞ்சீவ், அம்மா காதாபாத்திரத்தில் வரும் ரமா என அனைவருமே சிறப்பான நடிப்பை அளித்து உள்ளனர்.

மாரிமுத்து, நிழல்கள் ரவி ஆகியோரைப் பற்றி தனியாகச் சொல்லவே தேவையில்லை.

அஜித் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு அருமை.

ஆர்.எஸ். ராஜ்பிரதாப்பின இசை படத்துக்கு பலம். த்ரில்லர் காட்சிகளில் மேலும் பயத்தை அதிகரிக்கிறது. அதே போல காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறது.

முகன்வேலில் எடிட்டிங் கச்சிம்.மூன்று க்ரைம் கதைகள்.. அதை ஒன்றாக இணைத்த அந்தாலஜி கதையை எந்தவித குழப்பமும் இல்லாமல், சிறப்பாக இயக்கி இருக்கிறார் தம்பித்துரை மாரியப்பன். அதோடு, தனியார் நடத்தும் கருத்தரிப்பு மையங்கள் (பெர்டிலிட்டி சென்டர்) குறித்த எச்சரிக்கை பார்வையையும் அளித்து இருக்கிறார்.

ரேட்டிங்: 3.5/5

Related Posts