“எனக்கு ‘சங்கி’ மீது ஈர்ப்பு!”: சந்தானம் ஓப்பன் டாக்!

“எனக்கு ‘சங்கி’ மீது ஈர்ப்பு!”: சந்தானம் ஓப்பன் டாக்!

கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நாயகனாக நடித்து வெளியான  வடக்குப்பட்டி ராமசாமி  திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று அரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படத்தின் வெற்றி விழாவில், நடிகர்கள் சந்தானம், நிழல்கள் ரவி, ரவி மரியா, எம்.எஸ் பாஸ்கர், கூல் சுரேஷ், சேஷூ, நடிகைகள் மேகா ஆகாஷ், ஜாக்லின், இயக்குநர் கார்த்திக் யோகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அப்போது பேசிய நடிகர் சந்தானம், “இந்தப் படத்தில் நான் நாயகனாக நடித்துக்கொண்டு இருக்கும் போது, எனக்காக அனைவரும் அவர்களின் வேலையை சரியாக செய்தது தான் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்தப் படத்திற்கு நல்ல பாசிட்டிவாக ரிவ்யூ வந்தது. எல்லாரும் படத்தை கொண்டாடுகிறார்கள்.‌

இந்த படத்தில் என்னுடன் நடித்தவர்கள் அனைவரும்,என் அனைத்து படத்திலும் வருவார்கள். ஆனால் ஹீரோயின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா என்று இயக்குநரை தான் கேட்க வேண்டும்.

மக்கள் சினிமாவை ரசிக்க வேண்டும். ஹாரர் காமெடி என்பதை விட சோசியல் காமெடி பண்ணுவது மற்றும் அதை கையாள்வது என்பது மிகவும் கடினம்” என்றார்.

இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “சமூக வலைத்தளங்களில் என்னை சங்கி என்று பேசி வருகிறார்கள். நான் பள்ளியில் படிக்கும் போது சங்கீதா என்ற பெண்ணை லவ் பண்ணினேன். அவரைக்கூட சங்கி சங்கின்னு தான் கூப்பிடுவேன். அதுக்காக அவர் சங்கி ஆகிவிடுவாரா?

இந்த படம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என இரு தரப்பினரும் பார்க்கும் படமாக உள்ளது. படத்தின் கருத்து மத நம்பிக்கையை வைத்து பணத்தை சம்பாதிக்க கூடாது என்பதுதான்.

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்றால்,  எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது எனவே எனக்கு கடவுள் இருக்கிறார். அவ்வளவுதான்.

மற்றபடி, என்னுடைய இயல்பே என்னை சுற்றி உள்ளவர்களை எப்போதும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பேன்” என்றார்.

 

Related Posts