வயநாடு பேரிடர்: சூர்யா, ஜோதிகா, கார்த்தி ரூ.50 லட்சம் நிவாரண உதவி

வயநாடு பேரிடர்: சூர்யா, ஜோதிகா, கார்த்தி ரூ.50 லட்சம் நிவாரண உதவி

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்து உள்ளது.  மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளனர்.

நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு அரசு சார்பில்  ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர்கள், சூர்யா, ஜோதிகா, கார்த்தி இணைந்து ரூ.50 லட்சத்தை நிவராண நிதியாக கேரளாவுக்கு அளித்து உள்ளனர்.

முன்னதாக நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில்,  “வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இதயம் நொறுங்குகிறது. மீட்பு நடவடிக்கைகளில் குடும்பங்களுக்கு உதவி செய்யும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் மற்றும் களத்தில் உள்ள மக்களுக்கும் என்னுடைய வணக்கங்கள்” என்று தெரிவித்து இருந்தார்.

Related Posts