மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 35 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி…

மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 35 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி…

வெளியானது  2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள். இதன் தரவரிசை பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் மொத்தம்  1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் மற்றும் மத்திய அரசு குரூப் ஏ மற்றும் குரூப் பி பதவிகளுக்கு 1,129 காலிப் பணியிடங்களுக்கான  தேர்வு முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டமாக நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன்  மாதம் 16 ஆம் தேதி முதல் நிலை தேர்வு, செப்டம்பர்  மாதத்தில் முதன்மை தேர்வு,அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி – ஏப்ரல் மாதங்களில்  நேர்காணலும்  நடைபெற்றது. இதில் உத்தரபிரதேச மாநிலத்தை  சேர்ந்த மாணவி சக்தி துபே முதலிடத்தை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 பேர் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் தர்மபுரியை சேர்ந்த பி.சிவசந்திரன் என்பவர் அகில இந்திய அளவில் 23-வது இடத்தை பிடித்துள்ளார். மோனிகா என்பவர் 39-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

 

மேலும் வெற்றி பெற்றவர்களில்   பெருநகர சென்னை  முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய மனிதநேய அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மனிதநேயம் ஐ.ஏ.எஸ் கட்டணமில்லா கல்வியகத்தில் பயிற்சி பெற்ற பல மாணவ-மாணவியர்கள் அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.  2024-ம் ஆண்டுக்கான  யுபிஎஸ்சி நேர்முக தேர்வில் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில்  23 ஆண்கள்,12 பெண்கள்  என  மொத்தம் 35 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுக்கு மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் நேர்முகத் தேர்வில் பங்கு பெறுபவர்கள் டெல்லி சென்று வருவதற்கு  விமான டிக்கெட், டெல்லியில்  தங்குவதற்கு  வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts