யுபிஎஸ்சி தேர்வு முடிவு:இயக்குனர் தங்கர் பச்சான் அண்ணன் பேத்தி  வெற்றி

யுபிஎஸ்சி தேர்வு முடிவு:இயக்குனர் தங்கர் பச்சான் அண்ணன் பேத்தி  வெற்றி

சிவில் சர்வீஸ் பதவிக்கான நேர்முகத் தேர்வு முடிவு நேற்று வெளியானது .2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள், தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயக்குனரும் நடிகருமான தங்கர் பச்சான் அவர்களது அண்ணன் செல்வராசு அவர்களின் பேயர்த்தி சரண்யா சரவணன் 125 இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்த செய்தியை  தங்கர் பச்சான் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

என்னுடைய மூத்த அண்ணன் செல்வராசு அவர்களின் பெயர்த்தி (பேத்தி) சரண்யா சரவணன் இந்திய அரசுப் பணித் தேர்வில் இந்திய அளவில் 125 இடத்தைப் பிடித்து IAS தேர்வாகி உள்ளார்.

எனது ஊர் பத்திரக்கோட்டைக்கும் கடலூர் மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

தன்னை உருவாக்கிய இம்மண்ணுக்கும் இம்மக்களுக்கும் மிகச்சிறந்த சேவை ஆற்றிட வாழ்த்துகிறேன்!என அந்த பதிவில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் தங்கர் பச்சான்.

 

Related Posts