டூரிஸ்ட் ஃபேமிலி: திரை விமர்சனம்

ஈழத்தை (இலங்கை) சேர்ந்த தாஸ் தனது மனைவி வசந்தி மகன்கள் இருவருடன் “கள்ளத்தோணியில்” ராமேஸ்வரம் வருகிறார். x ஆகிய நால்வரும், அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், பொருளாதார அகதிகளாக ஆக்கப்பட்டு படகில் ராமேஸ்வரத்திற்குத் தப்பித்து வருகிறார்கள். பிறகு வசந்தியின் அண்ணன் உதவி செய்ய… சென்னையில் குடியேறுகிறார்.
தாஸின் குடும்பம், தெருக்காரர்களிடம் ஈழத் தமிழர்கள் என்பதை மறைத்து, கேரளாவில் இருந்து வந்திருப்பதாக சொல்கிறார்கள்.
இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தாஸின் குடும்பத்தைத் தேடுகிறது காவல்துறை.
தாஸின் குடும்பத்திற்கு என்ன ஆகிறது என்பதுதான் மீதிக்கதை.
யும் பேசியிருக்கிறது அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்தின் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’.
சமீபகாலமாக தேர்ந்தெடுத்து நடிக்கத் துவங்கி இருக்கிறார் சசிக்குமார். இதும் அப்படிப்பட்ட படம்.. அப்படிப்பட்ட வேடம். முதல் பாராட்டுஅவருக்கு.
பிறரிடம் அன்பு செலுத்துவது – ஓடிச்சென்று உதவுவது, குடும்பத்தின் பாதுகாப்பை எண்ணி அவ்வப்போது கலங்குவது என சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார். சொந்தபந்தமற்ற வயது முதிர்ந்த தம்பதியில் மனைவி இறந்துவிட… தெருக்காரர்கள் அனைவரிடமும் ஓடி ஓடிச் சென்று தகவல் சொல்லி அழைத்து வருவது.. தனது காதலி வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டு ஆடிப்பாட, அந்தக் காட்சியை போனில் காண்பித்து மகன் மனம் குமுற சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கிக் கொள்வது என பல காட்சிகளில் நெஞ்சுக்குள் புகுந்து விடுகிறார் சசிக்குமார்.
குடும்பத் தலைவியாக, அக்கம்பக்கத்தினரிடம் பாசம் காட்டும் பெண்ணாக சிறப்பாக நடித்து உள்ளார் சிமரன்.
இவர்களின் மூத்த மகனாக வரும் மிதுன் ஜெய் சங்கர், காதல் சோகத்தையும் அப்பாவின் மீதான கோபத்தையும் மனதில் வைத்து முகத்தில் இறுக்கம் காட்டி சிறப்பாக நடித்து உள்ளார். இளைய கனாக வரும் சிறுவன் கமலேஷின் அட்டகாசங்கள், அட்டகாசம்.
குறிப்பாக, ‘சர்ச் காட்சியிலும் வெளிப்படுத்தும் குறும்புத்தனம் டாப்!
எம்.எஸ்.பாஸ்கர் எப்போதும்போல சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார். கண்டிப்பான மனிதராக வரும் அவர், பிறரிடம் தான் எதிர்பார்ப்பது என்ன என்பதை உணர்த்தும் காட்சி சிலிர்ப்பு. சிறு வேடத்தைக்கூட நிறைவாக அளிப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.
கொடூர போலீஸ் அதிகாரியாக வரும் ராம்குமார் பிரசன்னா எரிச்சலூட்டி, வெற்றி பெற்று இருக்கிறார்
நல்லவேளையாக யோகிபாபுவை அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். ஆகவே ரசிக்க முடியாவிட்டாலும், துருத்தலாக இல்லை.
இதர கதாபாத்திரங்களில் வரும் ரமேஷ் திலக், ஶ்ரீஜா ரவி, இளங்கோ குமரவேல், பகவதி பெருமாள், அபிஷன் ஜீவிந்த், யோக லட்சுமி ஆகியோர் தங்களது இயல்பான நடிப்பால், கவர்கிறார்கள்.
தனித்து ஈர்க்காமல், படத்துடன் பயணித்து ரசிக்க வைக்கிறது அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு. அதற்கு கலரிஸ்ட் அருண் சங்கமேஷ்வர் பலமாக இருக்கிறார். ஷான் ரோல்டன் இசையில், ‘ஆச்சாலே’, ‘வாழ்ந்து பாரு’, ‘இறகே’ என அனைத்து பாடல்களும் அருமை. பின்னணி இசையும் அபாரம்.
பரத் விக்ரமனின் படத்தொகுப்பு கச்சிதம்.
ஈழக் குடும்பம் தமிழ்நாட்டுக்கு வரும் முதல் காட்சியில் இருந்தே கதை துவங்கி, தெளிந்த நீரோட்டம் போல் செல்கிறது. அவர்களுக்கு என்ன ஆகுமோ என்கிற பதட்டத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக எகிறச் செய்வதிலும் வெற்றி பெற்று இருக்கிறார் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.
தவிர எந்தவொரு கதாபாத்திரமும் இயல்புக்கு மீறி படைக்கப்படவில்லை. ஆகவே படத்தின் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் உறுத்தல் இன்றி நம் நெஞ்சுக்குள் புகுந்துவிடுகின்றன.
“இந்தத் தமிழ் பேசறது பிரச்னையா, இல்ல நாங்க தமிழ் பேசறதே பிரச்னையா?” என அரசியல் பேசும் வசனங்கள் அற்புதம்.
மொத்தத்தில் ரசித்துப் பார்க்கலாம்… கவனித்துப் பார்க்கலாம்.