எருது விடும் விழாவில் பலியானவருக்கு தமிழ்நாடு அரசு ரூ.3 லட்சம் நிவாரணநிதி! கதிர் ஆனந்த் எம்.பி. வழங்கினார்!

எருது விடும் விழாவில் பலியானவருக்கு தமிழ்நாடு அரசு ரூ.3 லட்சம் நிவாரணநிதி! கதிர் ஆனந்த் எம்.பி. வழங்கினார்!

வேலூர் மாவட்டம் கணியம்பாடி வட்டம் நாகநதி கிராமத்தில் நேற்று 23.02.2024 நடைபெற்ற எருது விடும் விழாவில், அரியூர் மதுரா திருமலைக்கோடியைச் சேர்ந்த ராம்கி (வயது 24) என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய் 3இலட்சம் வழங்கப்படும் என உத்தரவிட்டிருந்தார்.

இன்று 24-02-2024, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூபாய் 3இலட்சத்திற்கான காசோலையை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவர்  டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி.,  உயிரிழந்த ராம்கி குடும்பத்தாருக்கு அதற்கான காசோலையை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.சுப்புலட்சுமி   உடனிருந்தார்.

Related Posts