பாம்பாட்டம்: விமர்சனம் 

பாம்பாட்டம்: விமர்சனம் 

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னாலான காலகட்டம்…ராணி மகாதேவி தனது சமஸ்தானத்தை ஆட்சி செய்து வருகிறார். அந்த சமயத்தில் ஒரு ஜோதிடர்,  ராணி, பாம்பு கடித்து இறந்து விடுவார் என்று கணித்து கூறுகிறார்.

இதனால் அந்த சமஸ்தானத்தில் உள்ள அனைத்து பாம்புகளையும் கொல்லும்படி உத்தரவு பிறப்பிக்கிறார் ராணி மகாதேவி. அதிலிருந்து ஒரு பாம்பு தப்பித்து அவரை கொன்று விடுகிறது.

தவிர,  ராணி மகா தேவியின் மகளுக்கும் பாம்பினால் ஆபத்து உள்ளது என்று ஜோதிடர் கூறுகிறார். இதனால் அவர்கள் ஊரை விட்டு வெளியேறுகின்றனர். அதன் பின்பு ராணியின் ஆவி அந்த அரண்மனையை சுற்றுவதாக  ஒரு அச்சம் மக்களிடையே நிலவுகிறது.

இந்நிலையில் இதனை விசாரிக்க போலீஸ் அதிகாரியாக ஜீவன் வருகிறார், அதன் பின்பு என்ன ஆனது என்பதே பாம்பாட்டம் படத்தின் கதை.
அப்பா – மகன் என  இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ஜீவன். சிறப்பாகவே நடித்து உள்ளார். குறிப்பாக காவல் அதிகாரியாக அவர் வரும் காட்சிகளில் மிரட்டுகிறார்.

ராணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள மல்லிகா ஷெராவத் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

தவிர சுமன், ரித்திகா சென், லிவிங்ஸ்டன், ஆகியோரும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

படம் முழுக்கவே ஆங்காங்கே வரும் சிஜி காட்சிகள்  ரசிக்க வைக்கின்றன.

அம்ரிஷ் இசையில் பின்னணி இசை  ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்துக்கு பலம்.

முதல் பாதி சற்று மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதியில் அதை ஈடுகட்டும் விதமாக அதிரடியாக காட்சிகள் அமைத்துள்ளார் இயக்குநர்.

ஆக்ஷன் மற்றும் பேண்டஸி நிறைந்த படமாக ரசிக்க வைக்கிறது பாம்பாட்டம்.

Related Posts