‘மாநாடு’ பட அப்டேட்! எஸ்.டி.ஆர். ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க, எஸ்.டி.ஆர். நடிக்கும் படம்,  ‘மாநாடு’. இந்தப் படத்தில் எஸ்.டி.ஆர். ஜோடியாக  கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும், இயக்குநர்கள் பாரதிராஜா,  எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்கள்.

சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் ஏற்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

 இதற்கிடையே சீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தை 40 நாட்களில் முடித்துக் கொடுத்தார்  எஸ்.டி.ஆர்.

மேலும் படத்துக்காக முழுவதுமாக உடல் எடையக் குறைத்து ஆச்சரியப்படுத்தி இருந்தார்.

‘ஈஸ்வரன்’ படத்தை முடித்தவுடன், கடந்த நவம்பர் 9-ம் தேதியிலிருந்து பாண்டிச்சேரியில்  ‘மாநாடு’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், நவம்பர் 15-ம் தேதி ட்வீட் செய்திருந்த இயக்குநர் வெங்கட் பிரபு, “விரைவில் ‘மாநாடு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும்” என்று பதிவிட்டார்.

இந்நிலையில் தற்போது மாநாடு திரைப்படம் குறித்த அறிவிப்பு நாளை காலை 9.09 மணிக்கு வெளியாகும் என்று வெங்கட் பிரபு அறிவித்து இருக்கிறார்.

 

Related Posts