முதல் படத்திலேயே சர்ச்சையில் சிக்கும் விஜயின் மகன், ஜேசன் சஞ்சய்!

முதல் படத்திலேயே சர்ச்சையில் சிக்கும் விஜயின் மகன், ஜேசன் சஞ்சய்!

டிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா தயாரிப்பில் புதிய படம் ஒன்றினை இயக்கி வருகிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நடித்து வருகிறாத்ர. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதாவது, இந்தப் படத்தின் தலைப்பு நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து, இன்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டர்தான் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதில், கையில் கத்தையோடு வைத்து இருக்கும் பணம் தீயில் எரிவது போல இருக்கிறது.ரூபாய் நோட்டுகளை எரிப்பது, இந்திய சட்டப்படி குற்றம். இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 489E இன் கீழ் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

“அட… அந்த போஸ்டரில் அமெரிக்க டாலர் பண நோட்டுதானே எரிக்கப்படுவதாக உள்ளது.. இதில் இந்திய சட்டம் எங்கே வந்தது” என்கிறீர்களா..

கொஞ்சம் பொறுங்கள்.

பண நோட்டை எரிப்பது அமெரிக்காவிலும் குற்றம்தான.

1861ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் நாணயத்தை – பண நோட்டை அழிப்பது சட்டத்திற்குப் புறம்பானது. 1948ல் மேலும் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அதாவது, அமெரிக்க கூட்டாட்சி சட்டம் 18, பிரிவு 333.

இதன்படி, அமெரிக்க நாணயங்கள், டாலர் நோட்டுகளை சிதைப்பது, எரிப்பது குற்றம். ஆறு மாத சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

வழக்கத்தைவிட இப்போது, அமெரிக்கா ரொம்பவே டெரராக இருக்கிறது. அந்நாட்டின் அதிபர் டிரம்ப் அப்படி இருக்கிறார்.

இப்படத்தை இயக்குவது நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் என்பதாலும், தயாரிப்பது லைகா என்பதாலும் அமெரிக்காவிலும் இப்படம் திரையிடப்படும்.

ஆகவே சிக்கல் பெரிதாகும்.

ஒருவேளை, “எரிக்கப்படுவது, போலி டாலர் நோட்டுகள்” என்பது போல காட்சிகள் வைத்து இருக்கிறார்களா, அப்படி வைத்திருந்தாலும் அமெரிக்க சட்டத்தில் இருந்து தப்ப முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி!

– டி.வி.சோமு

Related Posts