ழெண்டு நாள் டாஸ்மாக் மூடல்!

ழெண்டு நாள் டாஸ்மாக் மூடல்!

வருகிற செப்டம்பர் 28ம் தேதி இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இதேபோல் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி  கொண்டாடப்படுகிறது.

இந்த இரண்டு நாட்களும் அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் இந்நாட்களில் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.