டப்பிங் பேசும்போது கண்கலங்கிய பிரபல நடிகை!!
சென்னை; விரைவில் திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்கும் சமூகப் புரட்சி கொண்ட திரைப் படம் தான் ” அருவா சண்ட “புதுமுகமாக தயாரிப்பாளர் நாயகனாக கலம் இறங்கியுள்ளார்.
இந்த படத்தில் முக்கிய காதாப்பாத்தில் நடிக்கிறார் சரண்யா பொன்வண்ணன். .
இந்தப் படத்தை ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பில்v.ராஜா தயாரித்து நாயகனாக நடிக்கவும் செய்கிறார். நாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார்.
இசை; தரண்
ஒளிப்பதி; சந்தோஷ் பாண்டி
எடிட்டிங்; V.J.சாபு ஜோசப்
கலை சுரேஷ் கல்லேரி
ஸ்டண்ட்; தளபதி தினேஷ்
நடனம்; தீனா மற்றும் ராதிகா
தனது வைர வரிகளின் மூலம் அருவா சண்ட படத்திற்கு மேலும் வலுசேர்த்திருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து .
இந்தப் படத்தைப் பற்றி கவிப்பேரரசு கூறும்போது… இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் இது போன்ற துடிப்பான இளைஞர்கள் சினிமா தயாரிக்க வருவது அதிசயம் தான். ஆனால் தம்பி V.ராஜா ஒரு கறுப்புத் தமிழன். அவர் தயாரித்து, கதை நாயகனாக வருவதில் எனக்கு பெருமிதம். இந்த படத்தில் பாடல்கள் எழுதியுள்ளேன் அவையனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது.
சமூக புரட்சி கொண்ட சாதியப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தை தயாரித்துள்ளார். இந்த தென்னாட்டு கருப்பு தமிழனுக்கு வாழ்த்துக்கள் என்றார்.
சென்சார் அதிகாரிகளின் பாராட்டுக்களுடன் ” யூ ” சான்றிதழ் பெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவரும் இந்த படத்தை ஆதிராஜன் இயக்கியுள்ளார்.நடிகை சரண்யா பொன்வண்ணன் விஜய்சேதுபதியுடன் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுவபவத்தை இந்த படத்தில் உணர்தேன். இதில் நாயகன் தம்பி V.ராஜா புதிது ஆனால் நடிப்பில் அப்படி தெரியவில்லை, சிறப்பாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருந்தார்.
இது ஒரு சிறந்த கதைக்களம் என்றார். மேலும் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு டப்பிங் பேசும்போது நான் என்னை அறியாமலே கண் கலங்கி விட்டேன் என்றார்.
-யாழினி சோமு