அந்த இடத்திற்குச் செல்ல வழிகாட்டுவதற்காக நாயகனையும் இழுத்துச் செல்கிறது காவல்துறை. அங்கே சென்று பிணமாகக் கிடக்கும் விவேக்பிரசன்னாவைக் கண்டறிகிறார்கள்.அவருடன் நாயகனின் கையைச் சேர்த்து கைவிலங்கு போடுகிறார் காவலதிகாரியாக வரும் கோடங்கிவடிவேல்.
கைவிலங்கிலிருந்து தன்னை விடுவிக்க முயல்கையில் விவேக்பிரசன்னாவுக்கு உயிர் இருப்பதை அறிந்துகொள்கிறார். அப்போது,விவேக்பிரசன்னாவின் கைபேசிக்கு ஓர் அழைப்பு வருகிறது.அதில் விவேக்பிரசன்னாவைக் காப்பாற்றச் சொல்லி நாயகி அழுகிறார்.
அவர் மூலம் விவேக்பிரசன்னாவைப் பற்றித் தெரிந்துகொள்ளும் அதேநேரம் அவரைக் கொல்லமுயன்ற கூட்டம் திரும்பவருகிறது.அவர்களிடமிருந்தும் காவல்துறையிடமிருந்தும் விவேக்பிரசன்னாவைக் காப்பாற்ற நாயகன் நிஷாந்த்ரூசோ போராடுவதுதான் படம்.