நாங்குநேரி யூனியன் சேர்மன் சௌம்யா ஆரோக்கிய எட்வின் சாதனை!

நாங்குநேரி யூனியன் சேர்மன் சௌம்யா ஆரோக்கிய எட்வின் சாதனை!

கடந்த உள்ளாட்சி தேர்தலில், நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவியை முதல் முறையாக திமுக சார்பில் கைப்பற்றி சாதனை புரிந்தார், சௌம்யா ஆரோக்ய எட்வின்!

வெற்றி பெற்ற விநாடியில் இருந்து, நாங்குநேரி மக்களுக்குத் தேவையான பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்தார், சௌம்யா ஆரோக்ய எட்வின்.

இதனால் நாங்குநேரி பகுதியில் அரசு திட்டங்கள் அனைத்தும் தொய்வின்றி நடக்க ஆரம்பித்தன. சேவை திட்டங்களும் சென்று சேர்ந்தன.இந்நிலையில்,   இந்தியா முழுவதிலும் இருந்து  “முன்னேறும் வட்டாரம் Aspirational Block “என்ற திட்டத்தின் கீழ் சிறந்த ஊராட்சி ஒன்றிய சேர்மேன்  தேர்ந்தெடுக்கும் பணி நடந்தது.

இதில் அகில இந்திய அளவில்,  நாங்குநேரி யூனியன் சேர்மன் சௌம்யா ஆரோக்கிய எட்வின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இதற்கான கூட்டம், புதுடெல்லியில் இன்று மாண்புமிகு ஒன்றிய பிரதமர் மோடி தலைமையில்    நடக்கிறது.சவுமியா ஆரோக்ய எட்வின், ஆரோக்ய எட்வின் உள்ளிட்ட கவுன்சிலர்கள் ஆகியோரால் நமது மாநிலத்துக்கு பெருமை சேர்ந்திருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள, சவுமியா ஆரோக்ய எட்வின் அவர்களுக்கு

tamilankural.com 

சார்பில் வாழ்த்துகள்!

Related Posts