சொன்னதைச் செய்த மிஷ்கின்!
மிஷ்கின் படம் என்றாலே ரசிகர் மத்தியில் ஒருபுதுவிதமான எதிர்பார்ப்பு இருக்கும். அவரது படம் புரிந்தும் புரியாதமாதிரியும், சற்று குழப்பதோடு சீட்டின் நுனியில் அமந்து பார்க்கும் ஒருவிதமான அனுபவத்தை ரசிகர் மத்தியில் ஏற்படுத்துக் கூடியது’ என்று சொல்லும் அழவிற்கு அவரது படம் இருக்கும்.
மிஷ்கின் அவர்கள் சினிமா மீது தீராத காதல் கொண்டவர் தனது தரமிக்க படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தனித்தன்மை மிக்க இயக்குநர் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் இயக்குநர் மிஷ்கின். இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் அதே நேரத்தில் திரைக்கல்லூரிகளில் பாடங்களாக விவாதிக்கப்பட்டும் வருகின்றது.
சினிமாவை உயிராக நேசிக்கும் அவர் நல்ல படங்கள் வரும் போது முதல் ஆளாக பாராட்டவும் தவறுவதில்லை. சமீபத்தில் நடந்த “பாரம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படம் வெளியாகும் போது நான் விளம்பரத்திற்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டுவும் தயங்கமாட்டேன் என்றார்.அவர் சொன்னது போல் அதனை நிருபித்துக் காட்டியுள்ளார்.
சினிமா மீதான அவரது அளவற்ற நேசம் ஆச்சர்யத்தை ஏற்டுத்தியுள்ளது.
தேசிய விருதை வென்ற “பாரம்” திரைப்படம் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் 2020 பிப்ரவரி 21 அன்று வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி
“பாரம்” படம் மீது இயக்குநர் மிஷ்கின் காட்டிவரும் அன்புக்கு விலைமதிப்பே கிடையாது. அவர் இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர்.
இவ்வளவு உயரத்தில் இருந்து கொண்டு புதுமுகங்களான எங்கள் மீது அவர் காட்டும் அன்பும் ஆதரவும் பிரமிப்பானது. இந்த அன்புக்கு ஈடு இணை ஏதுமில்லை. “பாரம்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போது அவர் பேசியதிலிருந்தே இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் பரவ ஆரம்பித்துவிட்டது. தற்போது அவர் போஸ்டர் ஒட்டியதன் மூலம் படத்தின் மீதான கவனம் பன்மடங்கு பெருகியிருக்கிறது. இந்த அன்பு எங்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்றார்.