வளம் தரும் ஐஸ்வர்ய லட்சுமியை வணங்குங்கள்!

வளம் தரும் ஐஸ்வர்ய லட்சுமியை வணங்குங்கள்!

ஒரு சமயம் சுரர் – அசுரர்கள் சேர்ந்து,பாற்கடலை கடைந்தனர். அப்போது, அதிலிருந்து மகாலட்சுமி தோன்றினாள்.

அவளோடு செழிப்பினை நல்கும் செல்வங்கள் அனைத்தும் தோன்றின.

அந்தச் செல்வங்களோடு உடனாக வந்து லட்சுமிதேவியே, ஐஸ்வர்ய மகாலட்சுமி எனப் போற்றப்பட்டாள். இவளை கன்யாலட்சுமி என்று அழைப்பதும் உண்டு.

பாற்கடலின் மேற்பகுதியில் ஐராவதம் படுத்த நிலையில், அதன் மீது உலகத்தாயான இவள் தோன்றினார்.  தன் பின் இரு கரங்களில் தாமரைகளைக் கொண்டும், முன் வலக்கரம் அபயம் காட்டியும், முன் இடக்கரம் அமுத கலசத்தினை தாங்கியும் காட்சியளிக்கிறாள்.

பாதங்களில் தேவர்கள் அர்ச்சித்த பொற்காசுகளும் நறுமலர்களும் குவிந்துள்ளன. ஐஸ்வர்ய லட்சுமியின் பின்புறம் கற்பக விருட்சம், விந்திய வாசினி எனும் துர்கை, சந்திரன், அப்சரஸ் ஆகியோர் நிற்கின்றனர்.

இவளின் இடப்பக்கத்தில் நோய்களைப் போக்குத் தன்வந்தரிரி, தெய்விகப் பசுவான காமதேனு, உச்சைச்வரஸ் எனும் தெய்விக குதிரை ஆகியவை இருக்கின்றன.

இந்த ஐஸ்வர்ய லட்சுமியை வணங்கினால் செல்வம் மட்டுமல்ல.. ஆரோக்யம், வெற்றி என 16 வளங்களும் கிடைக்கும்.