தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

பரமக்குடி: பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தியாகி இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் திமுக சார்பாக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நவாஸ் கனி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும், எம்பி-க்களும் அஞ்சலி செலுத்தினர். அவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Posts