சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் கடந்த 10 ஆம் தேதி அவர் வீட்டிற்குச் சென்ற மாநில சிஐடி காவல்துறையினர், அழரை கைது செய்தனர்.  அவரை, 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நீதிமன்ற காவலில் சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டார்.

அவரின் நீதிமன்றக் காவல் நிறைவடையும் நிலையில், நீதிபதி முன்பு சந்திரபாபு நாயுடு காணொளி காட்சி மூலம் ஆஜரானர்.

அப்போது, சந்திரபாபு நாயுடுவை 2 நாட்கள் சிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.