’’கொரோனா டாக்கீஸ்’’ கலாய்க்கும் நெட்டிசன் கண்கலங்கிய வடிவேலு!
”கொரோனா” பீதியில் நாடே இருக்கும் சூழ்நிலையில், நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கொரோனா பரவத்தொடங்கிய முதல் சமூக வலைதளங்களில் வடிவேலுவின் மிம்மீஸ் அதிகரித்து கலட்ட’ போஸ்டர் கலாய்ப்பு என நெட்டிசன்களின் வேலை விபரீதத்தை உணராமல் தொடர்ந்து கொண்டே உள்ளது.
இதப்பற்றி எல்லாம் கவலைப்படாத வடிவேலு தனது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் அன்பான கண்ணீர் வடிய ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். தயவு செய்து யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள், வந்தால் கொரோனா வைரஸ் இன்னும் அதிகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது.
நமது உயிரை காப்பதற்க்கு அரசு,சினிமா பிரபலங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் வடிவேலு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.