’’கொரோனா”சென்னை மாநகராட்சி அதிரடி..!

சென்னை:  கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சி கொரோனா தனிமைபடுத்துதல் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் இதுவரை அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்கானிக்கப்பட்டு வந்தனர். ஆனால் இப்போது அது சாத்தியமில்லை. சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொரிவிக்கப்படுகிறது.

ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலும் வீட்டில் இருக்கும் அனைவரும் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுபவர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  அதிரடியாக  அறிவித்துள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னையில் தான் தொற்றின்  பாதிப்பு அதிகமாகவும் மோசமாக உள்ளது.

கடந்த சில தினங்களில் மட்டும் சென்னையில் பாதிப்பானது அபாயகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு  நோய் தொற்று உறுதி செய்யப்பட்டள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில்  நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தீவிரமாகிக் கொண்டு வருகிறது. நோய் தொற்றைத்  தடுக்க அரசு பல்வேறு வழிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்த ஆபத்தான சூழ்நிலையில் சில முக்கியமான அறிவிப்புகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ளார். சென்னையில் கொரோனா அறிகுறி இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் வீட்டில் ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டால் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் முகாமிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கொரோனா தொற்று இல்லாதவர்கள் 10 அல்லது 15 நாட்கள் முகாமில் தங்கவைத்தது பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றுஅவர் தெரிவித்துள்ளார்.   மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  கூறியதை  அவ்வாறு இல்லை.  தனிமைப் படுத்துதலை கடைப்பிடிக்காத நபர்கள் மட்டுமே முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

எஸ்.யாழினி