மெட்ராஸ் பார் அசோஷியேஷன் – பில்ரோத் மருத்துவமனை இணைந்து நடத்திய இருதய மருத்துவ முகாம்!

மெட்ராஸ் பார் அசோஷியேஷன் – பில்ரோத் மருத்துவமனை இணைந்து நடத்திய இருதய மருத்துவ முகாம்!

உலக இருதய தினத்தை (29.09.2024) முன்னிட்டு மெட்ராஸ் பார் அசோஷியேஷனுடன் இணைந்து  பில்ரோத் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெகநாதன், இருதய மருத்துவ முகாமை நடத்தினார் . இதை,  சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி நீதிபதி  கிருஷ்ணகுமார் துவங்கி வைத்தார்.

இதில் மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர்  பாஸ்கர், செயலாளர் திருவேங்கடம், ரவுண்டு டேபிள் இந்தியா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த முகாம் மூலம் பல நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பயனடைந்தனர். நம் அன்றாட வாழ்வில் உள்ள மன அழுத்தம், வாழ்வு முறையால் ஏற்படும் இதய பாதிப்புகளையும் அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதால் எவ்வாறு உயிரை காக்க முடியும் என்பதையும் மருத்துவர் டாக்டர். தீபா முத்துகுமார் எடுத்துரைத்தார்.

இந்த முகாமில் முழு இருதயநோய் கண்டறியும் இரண்டு நாள் முகாம் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளபடுகின்றன. இதன் சிறப்பு அம்சமாக ஒரு குடும்பத்தில் இருவர் பயனடையும் வகையில் மருத்துவ பரிசோதனை அட்டையை மாண்புமிகு நீதிஅரசர் திரு. கிருஷ்ணகுமார் வெளியிட்டார். முதல் இருதய பரிசோதனையை  நீதிபதி தண்டபாணி  செய்து கொண்டார்.

Related Posts