கொரோனாவால் நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் பிரபல நடிகர்..!

 நந்தனம் என்ற மலையாள  திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் பிரித்விராஜ்.  அதைத்  தொடர்ந்து  தமிழில் பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், உருமி என பல படக்களின் நடித்து தமிழ் ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்தார்.

தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துவருகிறார். சமீபத்தில் அவரது  படப்பிடிப்புக் குழுவினர் படபிடிப்புக்காக ஜோர்டான் சென்றனர்.

பிரபல மலையாள இயக்குநர் பிளெஸ்ஸி, பிரித்விராஜை வைத்து’’ ஆடு ஜீவிதம்’’ என்ற படத்தை  இயக்கி வருகிறார்.

கதை என்ன வென்றால் சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச்  சென்று  அங்கு ஆடு மேய்க்கும் பணிக்கு தள்ளப்படுகிறான் நாயகன்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால்  ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டது .ஆனால் இந்த உத்தரவு  வருவதற்கு முன்னரே  படப்பிடிப்பிற்காக ஜோர்டானுக்கு கிளம்பிவிட்டனர்  படக்குழுவினர்.

 144 தடை இருப்பதால் விமான சேவைகள்   ரத்தானது இப்போது   நாடு திரும்ப முடியாமல் படக்குழுவினர் தவித்துவருகின்றனர்.

எங்களை எப்படியாவது நாடு திரும்புவதற்கு உதவி செய்யுங்கள் என பிலிம்சேம்பரை  எனும் தென்னிந்திய வர்த்தக சபையினை தொடர்பு கொண்டுள்ளது படக்குழு. தற்போது இந்த  தகவல் கேரள முதலமைச்சர் கவனத்திற்குச் சென்றது குறிப்பிடதக்கது.

Related Posts