“நடிகர் ரஞ்சித் அறியாமல் வன்மத்தை வெளிக்காட்டுகிறார்!”: சி.பி.எம். கனகராஜ் கண்டனம்!

திருநெல்வேலியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், சாதி மறுப்பு திருணம் செய்து வைக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பெண் வீட்டார், கட்சி அலுவலக கண்ணாடி, நாற்காலிகளை உடைத்து அலுவலகத்தை சூறையாடினர். இது தமிழ்நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகர், “பெற்றோர் இல்லாமல் திருமணம் நடைபெறக் கூடாது என சட்டம் இயற்ற வேண்டும். நாடக காதல் என்று சொல்லும் போது மட்டும், என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள். நாடக காதலை எதிர்ப்பதால் நான் சாதி வெறியன் என்றால், ஆம் நான் சாதி வெறியன் தான் என்றார்.
மேலும், “சமூக நீதி என்று பேசினால் எனக்கு கடும் கோபம் வரும். சுயமரியாதை, சமூக நீதி பேசுபவர்கள் முதலில் தங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்ணிற்கு சுயமரியாதை திருமணம் செய்து வைக்கட்டும்” என்றும் கூறினார்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான கனகராஜ், நடிகர் ரஞ்சித்துக்கு பதிலளித்து உள்ளார். அவர், ” கம்யூனிஸ்ட் கட்சியினரின் குழந்தைகள் பலர் சாதி மத மறுப்பு திருமணம் புரிந்துள்ளனர். நூறு வயதை கடந்து வாழ்ந்த தோழர் சங்கரய்யா கூட சாதி,மத மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்தான். இதுபோல் நீண்ட பட்டியல் உள்ளது.
நடிகர் ரஞ்சித் அறியாமல் பேசி, வன்மத்தை வெளிக்காட்டி உள்ளார்” என்று கனகராஜ் தெரிவித்து உள்ளார்.