மாருதி நகர் காவல்நிலையம்: ஒரே இரவில் நடக்கும் சம்பவம்!
கொன்றால் பாவம் மூலம் நேர்த்தியான க்ரைம் த்ரில்லரை அளித்த, தயாள் பத்மநாபன், அதே வரலட்சுமி சரத்குமார் நாயகியாக நடிக்கும் மாருதி நகர் காவல் நிலையம் என்ற படத்தை இயக்குகிறார்.
இது குறித்து அவர் “நான் ஒரு ஆஞ்சநேயர் பக்தன், அதனால்தான் மாருதி என்ற தலைப்பு வந்தது.
கதை ஒரு காவல் நிலையத்தைச் சுற்றி வருகிறது, ஒரே இரவில் நடக்கிறது.
படத்தில், எஸ்ஐயாக வரலட்சுமி நடிக்கிறார். ஆரவ் ஏசிபியாக நடிக்கிறார்” என்று தயாள் தெரிவித்தார்.
கொன்றால் பாவம் படத்தின் வெற்றியை அடுத்து, தயாள் பத்மநாபனின் இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

