அதிமுக – பாஜக கூட்டணி முறிகிறதா? இன்று தெரியும்!

அதிமுக – பாஜக கூட்டணி முறிகிறதா? இன்று தெரியும்!

தொடர்ந்து பாஜக அவமானப்படுத்தி வருவதால் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுமா என்று இன்று தெரியும்.

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. இதில் இந்த கூட்டணி தோல்வி அடைந்தது. அதிலும் பாஜக 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. சட்டமன்ற தேர்தல் ேதால்விக்கு பாஜக தான் காரணம் என்று அதிமுக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியது. அதிமுக தான் காரணண் என்றது பாஜக.

அது மட்டுமல்லாமல் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜ தலைவர் அண்ணாமலை இடையே கடும் மோதல் இருந்து வருகிறது.

‘இருவரும் மேற்கு மண்டலத்தைச் சார்ந்தவர்கள் என்பதோடு ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்குள்ளும் யார் பெரியவர்கள் என்பதில் ஈகோ இருந்து வருகிறது’ என்ற விமர்சனம் எழுந்தது.

இந்த விவகாரம், உச்சக்கட்டத்தை எட்டியிருந்த நேரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை,  முன்னாள் முதல்வர் அண்ணா, பசும்பொன் முத்துராமலிங்கரிடம் மன்னிப்பு கோரியதாக பேசினார். இது பொய் என்பது அம்பலமானது.

அண்ணாமலை கருத்துக்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

“அண்ணா குறித்து கருத்து தெரிவிக்க அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது. அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், சொன்ன கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று அண்ணாமலை கூறிவிட்டார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் தொடங்கி செல்லூர் ராஜூ வரை, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர்.

வார்த்தை போரின் உச்சக்கட்டமாக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். அதே நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் சொன்னவுடன்  அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மீண்டும் வராதீர்கள் என்ற வாசகம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்நிலையில்  சமூக வலைதளங்களிலோ, பொதுவெளியிலோ அதிமுக கூட்டணி குறித்து விமர்சிக்க வேண்டாம் என பாஜகவினருக்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டது. அதேபோல, பாஜகவை விமர்சிக்க கூடாது என அதிமுகவினருக்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

இதனை அடுத்து, அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட ஐந்து முன்னாள் அமைச்சர்கள் பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார் தெரிவிக்க அவசர, அவசரமாக டெல்லிக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், அண்ணாமலையை மாற்ற முடியாது என்ற முடிவில் அமித்ஷா இருந்ததால் அவர், அதிமுக தலைவர்களை சந்திக்க மறுத்து விட்டார். தொடர்ந்து அதிமுக தலைவர்கள் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினர். அப்போது அவரும் அண்ணாமலையை மாற்ற முடியாது. அவர் மாநில தலைவராக நீடிப்பார். போய் தேர்தல் வேலையை கவனிக்கும்படி ஜே.பி.நட்டா கூறிவிட்டார். இதனால் ஏமாற்றத்துடன் அதிமுக தலைவர்கள் தமிழகம் திரும்பினர். இது எடப்பாடிக்கு பெரும் அவமானமாக போய்விட்டது.

இதனால், அவர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதில் தயாராக இருக்கிறார். தமது மீது ஏதாவது வழக்கு போட்டாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார்.

ஆனால், கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர் போன்றவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதா? இல்லை என்றால் அவமானத்தை தாங்கி விட்டு பாஜக கூட்டணியில் தொடர்வதா? என்பது தொடர்பாக முடிவு எடுப்பது தொடர்பாக இன்று அவரசமாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி கூட்டியிருக்கிறார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் கூட்டம் டைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டத்தின் முடிவு குறித்து அதிமுக தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தவிர

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts