“சம்பளத்த கேட்டா வில்லனா பாக்குறாங்க!”: ‘ஜோரா கைதட்டுங்க’ விழாவில் யோகிபாபு குமுறல்!

“சம்பளத்த கேட்டா வில்லனா பாக்குறாங்க!”: ‘ஜோரா கைதட்டுங்க’ விழாவில் யோகிபாபு குமுறல்!

யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும், ‘ஜோரா கையைத் தட்டுங்க’ படம் வரும் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது.  இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், “யோகி பாபு குறித்து அவதூறு கருத்துக்களை சிலர் அவர்களின் படங்களின் புரோமோஷனுக்காக பரப்புகிறார்கள். ஒரு நடிகர் அந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில், ஒரு நாளோ இரண்டு நாளோ நடித்திருப்பார்.. அந்த படத்தின் புரோமோஷனுக்கு அவரை அழைத்து  அவர் வரவில்லை என்று குற்றம் சுமத்துவது  முற்றிலும் தவறு.

ஒரு படத்தில் யோகி பாபு 15 நாட்கள், 20 நாட்கள் நடித்துள்ளார் என்றால் அந்த படத்தின் புரோமோஷனுக்கு அவரை அழைப்பது சரியானது, யோகி பாபுவும் அந்த படத்தின் புரோமோஷனுக்காக வருவார்.

இந்தப் படத்தின் கதாநாயகனாக யோகி பாபு நடித்துள்ளார். அதனால் இந்த படத்தின் புரோமோஷனுக்கு அவர் வந்துள்ளார்.

மேலும் யோகி பாபு காமெடியனாக நடிக்கும் படங்களில் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டு, கதாநாயகனாக நடிக்கும் படத்தில் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக எஸ்.ஜே. சூர்யா கூறியதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். வில்லனாக நடிக்க கூப்பிட்டால் நான் சொல்வதுதான் சம்பளம், கதாநாயகனாக நடிக்க கூப்பிட்டால் நீங்கள் கொடுப்பதை நான் வாங்கிக் கொள்கிறேன் என எஸ்.ஜே. சூர்யா சொன்னார். அதேபோல் நீங்களும் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

இவரைத் தொடர்ந்து பேசிய யோகி பாபு, ” தனஞ்ஜெயன் சார், நான் சம்பளத்தை எப்போதும் முடிவு செய்வது கிடையாது. எனது சம்பளத்தை முடிவு செய்பவர்கள் அவர்கள் ( படக்குழுவினர்), அந்த சம்பளத்தைக் கேட்டாலே என்னை வில்லனாக பார்க்கிறார்கள். நான் சம்பளத்தையே முடிவு செய்யவில்லை. நீங்களே கதை கேளுங்கள், நீங்களே சம்பளத்தை முடிவு செய்யுங்கள், நீங்கள் பேசிய சம்பளத்தை முழுவதுமாக பெற்றுக் கொடுத்து விடுங்கள். நான் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்களின் புரோமோஷனுக்கு நான் எப்படி வர முடியும்? நான் அனைவருக்கும் ஒத்துழைக்கும் மனப்பான்மையில் தான் இருக்கிறேன்.  எனக்கு சம்பள பாக்கி எவ்வளவு இருக்கிறது தெரியுமா? அந்த பட்டியலை நான் வெளியிட்டால் எனக்கு வரவேண்டிய பணத்தை பெற்றுக் கொடுத்து விடுவீர்களா? அதனால் உண்மை என்று தெரியாமல் பேச வேண்டாம். மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது” என்று பேசினார்.

Related Posts