பிரபலமாகும் விசா ஆஞ்சநேயர்…!
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை ஸ்ரீ வீற்றிருந்த பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஸ்ரீ விநய ஆஞ்சநேய ஸ்வாமி சன்னதி அமைந்துள்ளது. வடக்கு நோக்கி அமைந்து இருப்பதால் இந்த ஸ்ரீ விநய ஆஞ்சநேயர் மிகவும் சக்திவாய்ந்தவராக மக்களால் கூறப்படுகிறது.
பக்தர்களின் குறையைத் தீர்த்து வைப்பதாலும், உடல்ரீதியான பிரசனைகளை தீர்பதால் இவர் வைத்தியர் எனவும் அழைக்கப்படுகிறார். மேலும் இவரிடம் வெளிநாடு செல்லும் பக்தர்கள் முழு மனதுடன் வேண்டினால் விசாவில் ஏற்படும் பிரசனை, தடைகள் நீங்கி விசா கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவ்வாறு குறைதீர்வதால் இவரை விசா ஆஞ்சநேயர் என்று அழைக்கின்றனர்.
இந்நிலையில் இம்மாதம் டிசம்பர் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை விநய ஆஞ்சநேய ஸ்வாமிக்கு லட்சார்ச்சனை நடைபெற இருக்கிறது.