படியில் பயணம்: பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவன் பலி

 

சென்னை;  தி.நகரில் அரசுப் பேருந்தின் படியின் பயணித்த மாணவர்கள் ஒருவர், பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியானார்.

சென்னை வேளச்சேரியில் இருந்து மாம்பலம் நோக்கி இன்று காலை சென்ற மாநகரப் பேருந்துில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. மாணவர்கள் சிலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

பேருந்து தி.நகர் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தபோது, பேருந்து நிற்பதற்கு முன்பே  மாணவர்கள் படிக்கட்டுகளில் இருந்து கீழே குதித்தனர். அவர்களில் ஒரு மாணவர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி,  உடல் நசுங்கி  சம்பவ இடத்திலேயே பலியானார்.

பலியான மாணவன், வேளச்சேரி எம்ஜிஆர் நகரில் வசிக்கும் குமார் என்பவர் மகன் சரண் என்பதும், பனகல் பார்க் அருகில் ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பதும் தெரியவந்தது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுனர் திருஞானசம்பந்தத்தை (வயது 38)  கைது செய்தனர்.

காலை மாலை நேரத்தில் கூடுதலான பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும், படிக்கட்டுகளில் நிற்கக்கூடாது என பெற்றோரும் மாணவர்களை அறிவுறுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.