மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்கள்: ரஜினி பவுண்டேஷன் சார்பில் உதவி!

மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்கள்: ரஜினி பவுண்டேஷன் சார்பில் உதவி!

மழை வெள்ளத்தால் தென்மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத  மழையால்  மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால், அந்த பகுதிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளை இழந்து,வாகனங்கள், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. ஒட்டுமொத்த வாழ்க்கை புரட்டிப் போட்டுள்ளது. திருநெல்வலி மாவட்டரஜினிகாந்த் foundation சார்பில்
மழை வெள்ளத்தால் பாதிக்க்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் , குடிநீர் , பால் பவுடர் , பிஸ்கெட் போன்ற உணவு பொருட்கள் தொடர்ந்து.

பாதிக்கபட்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி , தென்காசி , தூத்துக்குடி, ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அகில இந்திய தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் மேற்பார்வையில் அந்த நான்கு மாவட்ட நிர்வாகிகள் மூலமாக  இன்று காலை 11 மணி அளவில் திருநெல்வேலி, கன்னியாகுமரி,  தூத்துக்குடி , தென்காசி மற்றும் நெல்லை புறநகர் பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டது.

 

Related Posts