இந்தியாவின் அடையாளமான ரத்தன் டாடா காலமானர்.

இந்தியாவின் அடையாளமான ரத்தன் டாடா காலமானர்.

இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களின் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான  ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அக்டோபர் 9 தேதி புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.

86 வயதாகும் ரத்தன் டாடா 1937 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் மும்பையில் பார்சி குடும்பத்தில் பிறந்தார்.

தனது பள்ளி படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் 1962 ஆம் ஆண்டு ரத்தன் டாடா டெல்கோவில் இருந்தார். அதன் பிறகு சுண்ணாம்புக்கல்லில் பணிபுரிந்த டாடா ஸ்டீலில் பணிபுரிந்து தனது பயணத்தை தொடங்கினார்.

குவாரிகள் மற்றும் குண்டுவெடிப்பு உலை குழுவின் உறுப்பினராக 1989 ஆம் ஆண்டு சேர்ந்தார். அதன் பிறகு டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஓய்வுக்கு பிறகு டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் தலைவராக பணியாற்றினார். இவர் பணியாற்ற தொடங்கிய நாள் முதல் டாட்டா குழுமத்தின் வருவாய் உயர்ந்தது கடந்த 2011 மற்றும் 12 ஆம் நிதியாண்டில் 100 பில்லியனை தாண்டியது குறிப்பிடத்தக்கது

ரத்தன் டாடா ஆடம்பரமான வாழ்க்கை சூழலில் வளர்ந்தாலும் இவர் அடக்கமாகவே இருந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டாடா குழுமம் இயங்கி வருகிறது.

எளிமையான இவரது அனுகுமுறை, பணிவு அவருக்கு வெற்றியை தேடி தந்தது மேலும் வாகனம், பொறியியல் மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் வணிகங்களை கொண்ட டாடா நிறுவனங்கள் உலக அளவில் 8000,000 பேருக்கு மேல் வேலை செய்து வருகின்றனர். மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது இறப்புக்கு உலக்த்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

-யாழினி சோமு

Related Posts