ராஜு முருகன் கவிதை வரிகளில் ’’ஆரத் தேடும்’’ பாடல் வெளியீடு!
விவசாயத்தை நேசிக்கும் தஞ்சைக்கார் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி , யோகிபாபு , ஆத்மியா நடிப்பில் உருவாகிவரும் “வெள்ளையானை” படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைக்கிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S .வினோத் குமார் தயாரிக்கிறார் .
முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமான இந்த படத்தில் E .ராமதாஸ் , மூர்த்தி ( இயக்குனர் ) ,SS ஸ்டான்லி ,பாவா செல்லதுரை ,’சாலை ஓரம் ‘ ராஜு , சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் .
தற்போது இந்த படத்திலிருந்து “ஆரத் தேடும் “ எனும் பாடலை இயக்குனர் வெற்றிமாறன் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலுக்கு .இயக்குனர் ராஜு முருகன் வரிகளை அமைத்துள்ளார். சந்தோஷ் நாராயணன் சையமைத்து பாடியுள்ளார் .இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது . விரைவில் திரைக்கு வர இருக்கிறது.