பெண் மருத்துவரை கொலை செய்யத குற்றவாளிகள் எண்கவுண்டர்! போலீசாருக்கு இனிப்பு வழங்கிய பொதுமக்கள்…
ஹைதராபாத்: நாடு முழுவதும் அதிர்வளைகளை ஏற்படுத்திய பெண் மருத்துவர் கொலை சம்பவம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் வைத்து 4 குற்றவாளிகளும் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த மாதம் 27ம் தேதி புதன் கிழமை மாலை அவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன.
ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இந்த கொலை சம்பவம் நடந்தது. இந்த கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும் போலீசார் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்தனர்.
கொலையாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தான் இன்று அதிகாலை போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவர்ம் எங்கு நடந்தது என்றால் அந்த பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட அதே இடத்தில் வைத்துதான் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். சத்தனபள்ளி டோல் கேட்டில்தான் இந்த வன்புணர்வு சம்பவம் நடந்தது. அங்கிருக்கும் புதருக்கு அருகேதான் அந்த பெண் கொடுமை படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அந்த பெண் கொலை செய்யப்பட்ட அதே இடத்திற்கு போலீசார் குற்றவாளிகள் நான்கு பேரையும் அழைத்து சென்றனர். பொதுவாக குற்றவாளிகளை குற்றங்களை எப்படி செய்தார்கள் என்பதை விளக்க வேண்டும். இதை விசாரணை அறிக்கையில் சேர்ப்பார்கள். இதற்காக அவர்களை அழைத்து சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை அந்த 4 பேரும் சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். எப்படி குற்றம் நடந்தது என்று விளக்குங்கள் என்று போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி நடத்திருக்கிறது. சரியாக அங்கு குற்றவாளிகளுடன் 6 போலீசார் மட்டுமே சென்றுள்ளனர்.
இதில் நான்கு பேரும் தப்பி செல்ல முயன்றதால் அங்கேயே வைத்து போலீசார் நான்கு பேரையும் என்கவுண்டர் செய்துள்ளனர். அந்த பெண் எங்கு துடிதுடிக்க கொடுமை படுத்தி கொலை செய்யப்பட்டாரோ அதே இடத்தில் வைத்துதான் இந்த 4 பேரும் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். சட்டங்கள் கடுமையாகும் போது குற்றங்கள் குறையவே செய்யும்.
நம் காவல் துறைக்கு ஒரு சல்யூட்..