நம்மவர் மோடி பைக் ரேலி முன்னோட்டம்’’ காஞ்சிபுரம்,கேளம்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்!

பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசர் அபியான்  அமைப்பின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் நிர்வாகிகளை  இனைத்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெய் கணேஷ் அவர்கள் இந்த ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வல முன்னோட்டத்தை 26 தேதி அறிமுகம் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுர மாவட்ட  நிர்வாகியான திரு. கண்ணன் கேசவன். திரு. செந்தில், திரு.பால்ராஜ், திரு.ஜீவரத்தினம் ஆகியோர் மத்திய சென்னை நிர்வாகிகளாக நியமித்தார்.

நம்மவர் மோடி ’’இருசக்கர ஊர்வலத்தை அதன் தேசிய தலைவர் திரு.ஜெய் கோஷ் திவேதி கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

இந்த இருசக்கர ஊர்வலத்தின் முன்னோட்டம் சென்ற கேளம்பாக்கம் மற்றும் படூர் ஆகிய  பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிருத்தப்பட்டது.

இரு சக்கர வாகன ஊர்வலம் முன்னோட்டத்தின் நோக்கம் என்ன?

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை பற்றிய விழப்புணர்வை  மக்களிடத்தில் கொண்டு செல்லும்  புதுவிதமான யுத்தி.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மக்களுக்கு தொண்டு செய்ய பாரத பிரதமரால் அமைக்கப்பட்ட திட்டம்.  இந்த திட்டத்திற்கும் பாஜக.வின் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது.  இது முழுக்க மக்கள் நலனுக்காக மட்டுமே.

இந்த இயக்கமானது 4 மந்திரிகள், 7 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற ஆட்சியர்கள் ஆகியோரை கொண்டு உருவாக்கப்பட்ட இயக்கமாகும்.

இந்த அமைப்பில் இருக்கும் மத்திய அரசின் திட்டங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கம் புதிய வழியாகும்.

இந்த பைக் ரேலி செல்வதன் மூலம் மக்களின் கவனம் மத்திய அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள முடியும்.  இந்த திட்டத்தின் பற்றிய விழிப்புணர்வு சதாரன  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

முதலில் 50 பேரை கொண்டு இந்த பைக் ரேலியை தொடங்க முடிவெடுத்தோம். ஆச்சரியம் என்ன வென்றால் தற்போது 2000 பேர் வரை இந்த பைக் ரேலிக்கு வர தயாராகயிருக்கின்றனர்.

இங்கு மட்டும் அல்லாது தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் எல்லா தாலுக்காக்களிலும் முகாம் அமைத்து  இதனை செயல் படுத்த உள்ளோம்.

இந்த திட்டத்தில் மொத்தம் 165 திட்டங்கள் அறிமுகம் செய்ய உள்ளோம்.; விவசாயிகளின் வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் கல்வி வளர்ச்சி உள்ளிட்டவை அடங்கும்.

சென்னையில் தொடங்கி 48 நாட்கள் முழுவதும் சுற்றி திரும்பவும் தொடங்கிய இடத்தில் முடிவடையும். இந்த திட்டத்தில் மத்திய மந்திரிகளும் கலந்து கொள்வார்கள்.

மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய புரிதல் மக்களிடையே இல்லாததால் அதனை அவர்களுக்கு நாங்கள் இதன் மூலம் தெரியப்படுத்த உள்ளோம்.

மத்திய அரசின்  முத்ரா திட்டம் இந்த திட்டத்தை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முத்ரா லோன் அதிகமாக பெறப்பட்டுள்ளது. இந்த திட்டம் போன்றே மற்றதிட்டத்தையும் பைக் ரேலி மூலம் தெரியப்படுத்தயுள்ளோம்.

மேலும் மத்திய அரசின் நிறைய திட்டங்கள் தமிழக மக்களுக்கு சென்று அடைவதில்லை சிரமங்கள் இருக்கின்றன. எனவே நாங்களே கலத்தில் நேரடியாக இறங்கியிருக்கிறோம்.

இவ்வாறு PMJKYPPA அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெய் கணேஷ் அவர்கள் கூறினார்.

இந்த ஊர்வலத்தின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டமான படூர் மற்றும் கேளம்பாக்கம் ஆகிய பகுதிகள் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆனாகின.