“அண்ணன் என்றாலே அன்பு!”: இறைவன் விழாவில் ஜெயம் ரவி நெகிழ்ச்சி!

“அண்ணன் என்றாலே அன்பு!”: இறைவன் விழாவில் ஜெயம் ரவி நெகிழ்ச்சி!

‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு நயன்தாராவும் ஜெயம் ரவியும்  மீண்டும் இணைந்துள்ள படம், இறைவன். இப்படத்துக்கு  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இதனை இயக்கியுள்ளார்.

ஹரி கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இப்படம் வரும் செப்.28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு நேற்று (செப்.24) சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் ஜெயம் ரவி, “எதற்காக இந்தப் பெயர் வைத்தீர்கள் என என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள். இறைவன் என்றாலே அன்புதான். இந்தத் தலைப்பை இயக்குநர் சொன்ன போது, ‘இன்னுமா யாரும் இந்த தலைப்பை வைக்கவில்லை?’ என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்பை கொடுக்கும் இறைவனை ஏன் தலைப்பாக வைக்கவில்லை என்று தோன்றியது.

நான் பார்த்த முதல் நடிகன் ரவிதான் என விஜய் சேதுபதி சொன்னார். ஆனால், நான் இயக்க வேண்டும் என நினைத்த முதல் ஹீரோ விஜய்சேதுபதிதான். சீக்கிரம் எனக்கு கால்ஷீட் கொடுங்கள்.

‘பொன்னியின் செல்வன்’ படம் முடித்து விட்டு என்ன செய்ய போகிறாய் என்று என் அண்ணன் மோகன் ராஜா “ஏன் ‘தனி ஒருவன் 2’ பண்ண மாட்டாயா? என்றார்.

அப்படி ஒரு அண்ணன் இருக்கும் போது எல்லாமே எனக்கு ஜெயம்தான்” – இவ்வாறு ஜெயம் ரவி பேசினார்

Related Posts