’’கொரோனா’’ எதிரொலி’ ஈஷா ஆதியோகி, தியானலிங்க வளாகம்  மூடல்!

கோவை; உலகப்  புகழ்ப்பெற்ற ஈஷா யோக, மற்றும் அறக்கட்டளை  மையம். நீலகிரி மலைத் தொடரின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலைச்சாரலில், அடர்ந்த காடுகளுக்கு நடுவில்  ஏராளமான வன விலங்குகள் உறையும் பிரத்தியேகமான வனப்பகுதியின் அருகில், 150 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.  உலகப் புகழ் வாய்ந்த இந்த சக்தி மையம், ஒரே கூரையின் கீழ் யோகாவின் பிரிவுகளான பக்தி, ஞானம், கர்மா மற்றும் கிரியா ஆகிய அனைத்தையும் வழங்கி உலகெங்கிலும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் அங்கு நிறுவப்பட்டிருக்கும் ஆதியோகி, தியானலிங்கம் ஆகியவற்றைத் தரிசிக்க வருவது வழக்கம்.  கொரோனா பாதிப்பின் காரணமாக பொது மக்களின் நலம் கருதி, அனுமதி மறுக்கப்பட்டு தற்காலிகமாக ஆதியோகி தியானலிங்க வளாகம் மூடப்படுவதாக அறிவித்திருக்கிறது ஈஷா யோக மையம்.