இல. நடராசன் நினைவு நாளில் தமிழர் ஓர்மை பாடல் வெளியீடு!

இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த மொழிபபோரில் முதன் முதல் ஈகையானவர்  இல.நடராசன்.

சென்னை மாகாணத்தின் அப்போதைய முதலமைச்சாரக இருந்த ராஜகோபாலச்சாரியார், பள்ளிகளில் இந்தியை கட்டாயப்பாடமாக்கினார். இதை எதிர்த்து பெருந்திரள் போராட்டம் 1937 தொடங்கி நடந்தது.

இல.நடராசன்

சென்னை ஜார்ஜ் டவுன், போர்த்துகீசு தெருவைச் சேர்ந்த இலட்சுமணன், குப்பம்மாள் தம்பதியின் மகன் – இருபதே வயது ஆன-  இல.நடராசனும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உறுதியுடன் கலந்துகொண்டார்.

1938 டிசம்பர் 05 அன்று சென்னை சௌகார் பேட்டையில் இருந்த இந்து தியாலஜிகல் உயர்நிலைப்பள்ளி முன்பு இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மறியலில்  அவர் கலந்துகொண்டார்.

அதற்காக நடராசன் உள்ளிட்டோருக்கு ஏழரை மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையில் இருந்தபோது வயிற்று வலி ஏற்படவே, டிசம்பர் 30 அன்று சென்னை அரசு மருத்துவமனையில் நடராசன் சேர்க்கப்பட்டார்.

மன்னிப்புக் கடிதத்தை அளித்தால் விடுதலைசெய்வதாக அரசு கூறியது. அதை நடராசன் உறுதியாக மறுத்துவிட்டார்.

 உடல் நிலை மோசமாகி, தண்டனைக் கைதியாகவே 1939 ஜனவரி 15 அன்று மறைந்தார்.

இவரது உடல் சென்னை மூலக்கொத்தளம் சுடு காட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள்  கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.  ஆல்பெர்ட் ஜேசுதாசன் தலைமையில்,  அண்ணாதுரை,  பொன்னம்பலனார், வெள்ளூர் அண்ணல் தங்கோ, டாக்டர் தருமாம்பாள் மற்றும் பலர் இறந்த நடராசனின் தியாகத்தை போற்றி உரையாற்றினர்.

இவருக்கு அடுத்து சிறையிலேயே உயிர்விட்டவர் தியாகி தாலமுத்து.

நடராசன் துவக்கிய தியாகத்தீ.. தொடர்ந்து எரிந்த தாலமுத்துவின் உணர்வுத்தீ… பெரும் போராட்டமாக மாறியது.

முரளி மனோகர்

இதையடுத்து அரசு தனது இந்தித்திணிப்பு உத்தரவை திரும்பப்பெற்றது.

இவர்கள் இருவர் நினைவாகத்தான்  1967ல் ஆட்சி அமைத்த தி.மு.க. அரசு,  சென்னை எழும்பூர் பகுதியில் அரசு அலுவலக கட்டிடத்துக்கு தாலமுத்து நடராசன் மாளிகை என பெயரிட்டது.

இந்தி எதிர்ப்புப் போரின் முதல் களப்போராளி நடராசன் மறைந்தது ஜனவரி 15.

இந்த நாளில் நடுகல் தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பு ‘இனி ஒரு புது விதி’ என்ற பாடலைத் தயாரித்து காணொலியுடன் வெளியிட்டிருக்கிறது.

முரளி மனோகர் பாட ல் எழுதி இயக்கி இருக்கிறார். இவர், இயக்கிய கர்ண மோட்சம்  குறும்படம் தேசிய, மாநில விருதுகள் பெற்றது. இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த முரளி மனோகர் விரைவில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.

இனி ஒரு விதி செய்வோம் பாடல்..

https://www.youtube.com/watch?v=Rgx0cJznnLg

 

Related Posts