“இறைவன் படத்தை ‘அவங்க’ பார்க்க வேணாம்!”: எச்சரித்த ஜெயம் ரவி

“இறைவன் படத்தை ‘அவங்க’ பார்க்க வேணாம்!”: எச்சரித்த ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் ஜெயம் ரவி. ஜெயம் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர், வித்யாசமான ஜானரில் படங்களை அளித்து ரசிகர்களை ஈர்த்து வருகின்றார்.

ஆரம்பத்தில் காதல் படங்களில் நடித்து வந்தார். பேராண்மை படத்தின் மூலம் ஆக்க்ஷன் ஹீரோவாக மிரட்டினார்.  தொடர்ந்து அதிரடி படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த நிலையில்  பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் (ராஜராஜ சோழன்) நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார் ஜெயம் ரவி. இப்படத்திற்கு பிறகு அவரின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

இந்நிலையில் இறைவன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது.

வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹ்மத் இப்படத்தை இயக்கியுள்ளார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் நயன்தாரா மீண்டும் இணைந்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு வெளியான இறைவன் ட்ரைலர் வெளியாக ரசிகர்களை கவர்ந்தது. ட்ரைலரை பார்க்கும்போதே, மிரட்டலான ஒரு சைக்கோ திரில்லர் என்பது தெரிந்தது.இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ஜெயம் ரவி, விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்றும், தனது அண்ணன் ராஜா குறித்து நெகிழ்ச்சியாகவும் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர்,  “இறைவன் படத்தை குழந்தைகளுடன் வரவேண்டாம்” என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.ஏற்கெனவே மிரட்டிய டிரெய்லர் போலவே,  நிகழ்ச்சி அரங்கத்தை அமைத்திருந்த விதமும் மிரட்டலாக இருந்தது.

கொலை செய்யப்பட்ட தலையில்லாத ரத்தம் தோய்ந்த உடல்.. உடலை எடுத்த பிறகு போலீஸ் போடும் குறியீடு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள்.. என பார்க்கவே அச்சத்தை ஏற்படுத்தி இருந்தன.

இவை படத்தின் மீதான பயம் கலந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

 

Related Posts