ரஜினியை சிக்கவிட்ட சீமான்!
கடந்த வருடம் மே 22ஆம் தேதி நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்க்கு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடியில் இயங்குவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி அங்கு இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி போராட்டகாரர்கள் ஊர்வலமாகச் சென்றார்கள். அந்தநேரத்தில், போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்றது.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் மிகப் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் அடுத்து அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடியில் பலபேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை நடிகர் ரஜினிகாந் தூத்துக்குடி சென்று பார்த்து விட்டு வந்தார்.
சென்னை திரும்பிய ரஜினிகாந்த், அந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து விட்டார்கள் அதநால் தான் வன்முறை வெடித்தது என்றார். இதன்காரணமாகவே காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என்று கூறினார். இந்த சம்பவத்துக்கு, இடையில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடபாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிப்புக்கு உள்ளானவர்கள்; சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை ஆணையம் தனது விசாரணை தொடங்கியது. அந்த விசாரணை ஆணையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்துகொண்டார்.
அவர், ‘பேரணியின்ப் போது சமூக விரோதிகள் நுழைந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவருக்கு சமூக விரோதிகள் நுழைந்திருக்கிறார்கள் என்ற தகவல் முன்னதாகவே தெரியும். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்’ என்று கோரிக்கைவைத்திருந்தார். இந்த சூழ்நிலையில், அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக இந்தமாதம் 25-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தரவேண்டும் என்று ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது.