திரை விமர்சனம்: யாரோ
தமிழ்த் திரையுலகில் சமீப காலமாக, த்ரில்லர் கதைகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் வந்திருப்பதுதான் யாரோ.
நாயகன் ஜான் சென்னையில் ஒரு தனியார் ககட்டிட நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடற்கரை அருகே பெரிய பங்களாவில் தனியாக வசித்து வருகிறார்.
அந்த பங்களாவில் தன்னைத் தவிர யாரோ ஒரு மர்ம நபர் நடமாடுவதாக உணர்கிறார் ஜான். அதன் காரணமாக, தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து விசயத்தைச் சொல்கிறார்.
ஆனால் அவர்கள் வரும்போது, பங்களாவில் வேறு யாரும் இல்லை.
ஒருநாள், தனது வீட்டிற்குள் இருந்து கேமரா ஒன்றை எடுக்கிறார். அந்த வீடியோ கேமராவில், யாரோ ஒருவர் ஒரு பெரியவரை கொலை செய்யும் காட்சி பதிவாகி இருக்கிறது. ஜான் அதிர்ச்சி அடைகிறார். கொலை செய்யும் நபரின் முகம் அதில் தெரியாமல் இருக்கிறது.
அந்த கொலையாளி யார், எதற்காக கொலை செய்கிறார் என்பதே கதை.
நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார் , வெங்கட். பெரும்பாலான காட்சிகளில் இவர்தான் வருகிறார். ஆனால் இயல்பான நடப்பை வெளிப்படுத்தி இருப்பதால் அலுப்பு தட்டவில்லை.
கே.பி.பிரபுவின் ஒளிப்பதிவு, கோஸ் ஃப்ராங்க்ளின் இசை படத்துக்கு பலம்.
சைக்கோ த்ரில்லர்கள் பல வந்துகொண்டிருந்தாலும், கதை – திரைக்கதையில் வேறுபடுத்திக் காட்டி தனித்து தெரிகிறார் இயக்குநர்.
மொத்தத்தில் பயந்தபடியே ரசிக்கலாம்.