’சைத்ரா’ திரை விமர்சனம்

’சைத்ரா’ திரை விமர்சனம்

ஜெனித் குமார்  இயக்கத்தில் யாஷிகா ஆனந்த் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் சைத்ரா. இந்த படத்தில் அவிதேஜ்,சக்தி மகேந்திரா பூஜா, கண்ணன், ரமணன், லூயிஸ், மொசக்குட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு  பிரபாகரன் மெய்யப்பன் இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு,சதீஷ் குமார்

சைத்ரா கதை என்ன?

நாயகி யாஷிகா ஆனந்த், தற்கொலை செய்ய கட்டிடத்தின் மேல் தளத்தில் சென்று நிற்கிறார். எதற்காக தற்கொலை செய்ய நினைக்கிறார் என்ற கதை ப்ளாஷ் பேக் செல்கிறது.

இரண்டு நண்பர்களுடன் காரில் செல்கிறார் யாஷிகா ஆனந்த். கார் விபத்துக்குள்ளாக இரண்டு நண்பர்களும் விபத்தில் உயிரிழக்கின்றனர்.

பிறகு இறந்தவர்கள் ஆவியாக வந்து யாஷிகாவை மிரட்டுகின்றனர். யாஷிகாவை எதற்காக இருவரும் துன்புறுத்துகிறார்கள்.? அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

எப்போதுமே தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் யதார்த்தமாக செய்து முடிப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் கதைக்கு தகுந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சைத்ரா கதாபாத்திரமாகவே மாறி படம் முழுவதும் அந்த கதாபாத்திரத்தோடு நம்மை பயணிக்க வைத்து விட்டார் யாஷிகா. மற்ற படங்களில் இருந்து இப்படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறார்.

யாஷிகாவின் கணவராக வரும் அவிதேஜ், தனக்கு கொடுக்கப்பட்டத்தை அளவோடு அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் தங்களுக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதை கட்சிதமாக நடித்து  காட்சிகள் அனைத்திற்கும் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு த்ரில்லிங்க் படத்திற்கு என்ன தேவையோ அதை கொடுத்து ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைத்திருக்கிறார் இயக்குனர்.
இயக்கத்திற்கு இணையாக இசையும் ஒளிப்பதிவும் பொருத்தமாக உள்ளது. சைத்ரா – ரசிக்க த்ரில்லான அனுபவத்தை கொடுக்கும்.

Related Posts