பத்திரிகையாளர்கள் தயாரித்து இயக்கி, நடிக்கும் குறும்படம்!
சென்னை; பிரபல பத்திரிகையாளரும், பசும்பொன் தேவர் வரலாறு ஆவணபட இயக்குனருமான கோடங்கி ஆபிரகாம் குறும்படம் ஒன்றை எழுதி இயக்குகிறார்.
’மலர்’ என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினமான ஜனவரி ஒன்று வெளியிடப்பட்டது.
படத்தின் டைட்டில், மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டார். புதுமுக நடிகர் சந்தோஷ் பிரபாகர், இயக்குனர் கோடங்கி ஆபிரகாம், பத்திரிகையாளர் ஒற்றன் துரை, ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
எதிர்பாராத விதமாக தவறான பாதையில் தள்ளப்படும் ஒரு பெண் இந்த சமூகத்தை எப்படி போராடி எதிர்கொள்கிறார் என்பதுதான் மலர் குறும்படத்தின் கதை.
மலர் குறும்படத்தின் நாயகியாக கயல்விழி என்ற புதுமுகம் அறிமுகம் ஆகிறார்.
இவர்களோடு “திடீர் தளபதி” சதிஷ் முத்து , ஜோயல், ஹிதயத்துல்லா , ஒற்றன் துரை மற்றும் பத்திரிகையாளர் சதிஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
அனீஷ் ஒளிப்பதிவு
இசை;விசு இக்குறும்படத்தை ‘ருச்சி சினிமாஸ்’ & ‘பாஸ்ட் மெஸெஞ்சர்’ இணைந்து வழங்க, P.சுமித்ரா தயாரித்து இருக்கிறார்.
இந்த குறும்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.