தமிழக அஞ்சலக பணியில் 3162 வடநாட்டவர்! : இப்படி செய்தி வருவதை தவிர்க்க…
தமிழக அஞ்சலக பணியில் 3162 வடநாட்டவர்!
– இப்படி செய்தி வர வாய்ப்பு இருக்கிறது. இதைத் தடுக்க உங்களால் முடியும்.
ஆம், தமிழகத்தில் அஞ்சலக பணியில், 3162 பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.
பதவியின் பெயர்: ஜி.டி.எஸ். (கிராமின் டாக் சேவா)
சம்பளம்: 25,000
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18 முதல் 40
மேலதிக தகவல்களுக்கு: https://appost.in/gdsonline/Home.aspx
(அருகில் உள்ள அஞ்சலகங்கங்களை அணுகியும் தகவல் பெறலாம்.)
வாய்ப்புக்களை கோட்டை விட்டுட்டு பின்னர் வடநாட்டவர் இங்கு பதவிகளைப் பிடித்துவிட்டனர் என புலம்புவதில் அர்த்தம் இல்லை; உங்களுக்கு தகுதி இருப்பின் இந்த பணிக்கு விண்ணப்பியுங்கள்… அல்லது விணப்பிக்கும் தகுதி உடையோருக்கு இத்ததகவலை தெரியுங்கள்..!
– யாழினி சோமு