அவர்கள் பசியின் தாக்கம் என்னைத் தின்றது…மிக்ஜாம் புயல் பாதிப்பு: களத்தில் இறங்கிய பார்த்திபன்!

அவர்கள் பசியின் தாக்கம் என்னைத் தின்றது…மிக்ஜாம் புயல் பாதிப்பு: களத்தில் இறங்கிய பார்த்திபன்!

மிக்ஜாம் புயலால், பாதிக்கப்பட்டு… தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கும் மக்களுக்கு உதவி செய்ய களத்தில் இறங்கியுள்ள பார்த்திபன், மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

 

.த(க)ண்ணீரும் சோகமும் வடியும் வரை…

இயன்றதை அனைவரும் செய்வோம்.
இன்று மதியம் சைதை பனகல் மாளிகை அருகே,
சுவையான உணவு வழங்கினோம்.அவர்கள் பசியின் தாக்கம் என்னைத் தின்றது.நான் ஒரு குட்டியானை எனப்படும் மூனேமுக்கால் சக்கர வாகனத்தில் சென்றேன்.எனவே சுருங்கிவிட்டது என் பயணமும் பயனாளிகளும். படகு இருந்தால் மட்டுமே பல பகுதிகளுக்கு செல்ல முடியும் ஆகையால் நாளை அதற்கான முயற்சி. நாளைய விஞ்ஞான வளர்ச்சியை பெருமையாக பார்க்கும் நாம்,அதையெல்லாம் துடைத்து தூர போட்டுவிட்டு, தனியொருவனுக்கு(அதுவும் தண்ணீர் வயிறளவு ஓடும் போது)உணவில்லையெனில்…..

வெட்கக்கேடு!ஜெய்ஹிந்த்!

Related Posts