தேர்வு உண்டு, மார்க் உண்டு.. ஆனா ரகசியம்! இது எந்த நாட்டில் தெரியுமா?

“மார்க் இல்லாவிட்டால் மூன்றாம் வகுப்பிலேயே பெயில் ஆக்குவோம்” என்கிறது மத்திய அரசின் சி.பி.எஸ்.சி. பள்ளி.
ஆனால் கல்வியில் சிறந்த நாடுகளின் நிலை வேறாக உள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதலிடம் பெற்றுள்ள பின்லாந்து நாடு, கல்வியிலும் சிறந்து விளங்குகிறது.
இங்கும், இன்ன பிற ஐரோப்பிய நாடுகளையும் நன்கு அறிந்த எனது நண்பர்கள் சிலர் சொன்ன விசயங்களைக் கேட்டு ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.
பின்லாந்து நாட்டிலும் மழழையர் பள்ளி உண்டு. ஆனால் அது கட்டாயமல்ல. அப்போதும்கூட, எழுதப் படிக்க என்று டார்ச்சர் செய்வது இல்லை. நீச்சல், சாலை விதிகளை தெரிந்துகொள்வதுxx போன்றவையே.
ஆறு வயது முடிந்த பிறகு பள்ளியில் சேர்ப்பதே அவசியம். இந்த நாட்டிலும் இன்னும் பல நாடுகளிலும் பள்ளி உயர் கல்வி வரை முற்றிலும் கட்டணமில்லா கல்வி. சில நாடுகளில் அதற்கு மேலும் கட்டணமில்லா கல்விதான்.
பள்ளியிலேயே சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றங்கள் குறித்தும் சொல்லித் தருகிறார்கள். தன்னம்பிக்கையையும், பிறரை மதிக்கும் தன்மையும் வளர ஒருங்கே கற்றுத்தரப்படுகிறது.
முக்கியமாக, தேர்வு என்கிற கழுத்தை நெறிக்கும் விசயம் இல்லை. அதாவது தேர்வு முறை உண்டு. ஆனால் அது அந்த மாணவர்களின் திறன் எதில் இருக்கிறது என்பதை அறிந்து அதில் பயிற்சி அளிக்கவே. மற்றபடி பிற மாணவர்களுடன் ஒப்பிட்டு எடை போட அல்ல. ஆகவே மதிப்பெண், குறிப்பிட்ட மாணவனுக்கு மட்டுமே சொல்லப்படும்.
இன்னொரு தகவல்.
ஒரு முறை யுனெஸ்கோ, ‘ஒட்டுமொத்தமாக உலகில் நாற்பது விழுக்காடு மாணவர்களுக்கு தாய் மொழி கல்வி கிடைக்கவில்லை. ஆகவே, அவர்கள் கல்வியில் பின்தங்கி இருக்கிறார்கள்” என்று அறிக்கை விட்டதும் நினைவுக்கு வருகிறது.