“நெருப்பாவே பொறந்த கூட்டம்..” :வ.கௌதமனின் அதிரவைக்கும் ‘படையாண்ட மாவீரா’ ட்ரெய்லர்!

வ.கௌதமன் இயக்கி நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான ‘கனவே கலையாதே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் வ.கௌதமன். இரண்டாவது படமாக 2010-ம் ஆண்டு வெளியான ‘மகிழ்ச்சி’ படத்தை இயக்கினார். இந்நிலையில், தற்போது வி.கே. புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் ஒன்றை இயக்கி படத்தின் நாயகனாகவும் நடித்துள்ளார்.
அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்க, கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். ‘படையாண்ட மாவீரா’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விருதாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய படங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. ட்ரெய்லரை பொறுத்தவரை வ.கௌதமனுக்கு பயங்கரமான இன்ட்ரோ கொடுக்கப்படுகிறது. அடுத்தடுத்து கௌதமன் வந்து செல்ல நடுவில் காதலும் வந்து போகிறது.
ஆக்ரோஷம், அடிதடி என நகரும் ட்ரெய்லரில், “பெரும்பள்ளி ராஜ ராஜ சோழனின் வம்சம்”, “பணத்தையும் பகையையும் காலா காலத்தில் ஃபைசல் பண்ணிடவேண்டும்”, “வெறும் பேச்சுக்கு மீசைய முறுக்குற கூட்டமில்ல, மரபணுவுல மானமும் வீரமும் நிறைஞ்சு நிக்கிற புலிக்கூட்டம்” போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன
https://www.youtube.com/watch?v=lS_f18xVPNQ