“நினைவுதான் சுகம்.. நேரடியா போகாதீங்க!”: ‘நினைவெல்லாம் நீயடா’ பட விழாவில் பேரரசு
![“நினைவுதான் சுகம்.. நேரடியா போகாதீங்க!”: ‘நினைவெல்லாம் நீயடா’ பட விழாவில் பேரரசு](https://tamilankural.com/wp-content/uploads/2024/02/4-a.png)
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம், நினைவெல்லாம் நீயடா.
இசை, இளையராஜா.
பிரஜின் கதாநாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் நாயகியாக தோன்றுகிறார். மேலும் ரோஹித், யுவலட்சுமி, சினாமிகா, மனோபாலா, மதுமிதா, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முத்துராமன், பி.எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் கே.ஆர், கே.ராஜன், பி.எல்.தேனப்பன், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, கவிஞர் சினேகன், நடிகைகள் கோமல் ஷர்மா, மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், “இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது எனக்கு ‘பன்னீர் புஷ்பங்கள்’ படம் ஞாபகத்திற்கு வந்துவிட்டது. நம்மை பள்ளி காலகட்டத்திற்கு அழைத்துச் சென்று விட்டது.
காதலித்து தோல்வி அடைந்தவர்கள் அப்படியே அந்த பசுமையான நினைவுகளுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். 20 வருடங்களுக்குப் பிறகு காதலியைப் போய் பார்க்கலாம் என்று நினைத்தால் உங்களுக்கு அவரது தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சி தான் கிடைக்கும். அதன் பிறகு மனதில் பசுமையான நினைவுகள் எதுவுமே வராது” என்றார்.