நல்ல கருத்தை காமெடியாகச் சொல்லும் ‘நல்லபடம்’!

நல்ல கருத்தை காமெடியாகச் சொல்லும் ‘நல்லபடம்’!

சமூகப் பிரச்சினையைத் தியேட்டரில் சிரித்து மகிழும் அளவுக்கு ஜாலியாகச் சொன்னால் எப்படி இருக்கும்? அதுதான் ‘நல்லபடம்’! C. பிரபுராம் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், செப்டம்பர் பதினெட்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

கதை என்னவென்றால், மதுவுக்கு அடிமையான குமரன் எனும் இளைஞனைச் சுற்றித்தான் அனைத்தும் நகர்கிறது. மகனை எப்போதும் தாங்கும் தாய், தம்பியின் குடிப்பழக்கத்தை எதிர்க்கும் சகோதரி அமுதா, காதலனைத் திருத்தப் போராடும் காதலி என இவர்களுக்கு நடுவில் குமரனின் அலப்பறைகள் தாங்க முடியாது!

இதில் கொடுமை என்னவென்றால், குமரனைப் போலவே மதுவை விரும்பும் சிலர் சேர்ந்து ஒரு சங்கத்தையே தொடங்கி, அதற்கு நம்ம குமரனை தலைவராகவும் ஆக்கிவிடுகிறார்கள். அந்தச் சமயத்தில் பார்த்து, நாடு முழுவதும் மதுவுக்கு அரசு தடை விதிக்கிறது! வாழ்க்கையே போச்சு என்று கதறும் குமரன், அதன்பின் எதிர்கொள்ளும் கலாட்டாக்களும் திருப்பங்களும்தான் இந்தத் படத்தின் மையக்கதை.

ஹரிஷ் சினிமாஸ் சார்பில் A. அழகுபாண்டியன் தயாரித்துள்ள இப்படத்தில் டாக்டர் A. ஹரிஷ், தனலட்சுமி ஆகியோருடன் மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா, பிரியதர்ஷினி எனப் பெரிய நட்சத்தsuper பட்டாளமே நடித்துள்ளனர். சகிஷ்ணா சேவியர் இசையில், அஸ்மின் பாடல்களை எழுத, இனியன் J ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். B.R. பிரகாஷ் படத்தொகுப்புப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

மதுவால் குடும்பங்களில் ஏற்படும் பாதிப்புகளை மையமாக வைத்து, அதேநேரம் காதல், சென்டிமென்ட், துள்ளலான நகைச்சுவை என அனைத்தும் கலந்த முழுமையான பொழுதுபோக்கு விருந்தாக உருவாகியுள்ளது ‘நல்லபடம்’.

வரும் செப்டம்பர் பதினெட்டாம் தேதி திரையரங்குகளில் இந்தச் சிரிப்புச் சரவெடியைக் கண்டு மகிழுங்கள்!

Related Posts