“டிரெய்லரை பார்த்து பலரும் திட்டினார்கள்! ஆனால்..”: ‘ஹாட்ஸ்பாட்’ படம் குறித்து கலையரசன்! !

“டிரெய்லரை பார்த்து பலரும் திட்டினார்கள்! ஆனால்..”:  ‘ஹாட்ஸ்பாட்’ படம் குறித்து கலையரசன்! !

கே.ஜே.பி. டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே.ஜே.பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ஹாட் ஸ்பாட்!

இப்படத்தில் கலையரசன், 96 பட ஆதித்யா பாஸ்கர், மற்றும் கௌரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ், சோபியா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

சதீஷ் ரகுநாதன் – வான் இருவரும் இணைந்து இசையமைக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். முத்தையன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

ஆண் பெண் உறவுகளில் பேசாத சில பக்கங்களைப் பேசும் படமாக உருவாகியுள்ள இந்த ஹாட் ஸ்பாட் திரைப்படம். வரும் மார்ச் 29-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதையொட்டி இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக் குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இன்று காலையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இவ்விழாவில் தயாரிப்பாளர் கே.ஜே.பாலமணி மார்பன் பேசும்போது, “இந்த ஹாட் ஸ்பாட் எங்களுடைய முதல் தயாரிப்பு. இயக்குநர் விக்னேஷ் எனக்கு நான்கு வருடமாக பழக்கம். லாக் டவுன் டைமில் ஒரு ஷார்ட் ஃபிலிம் செய்தோம். திட்டம் இரண்டு படம் செய்தபோதே இப்படத்தின் கதையை சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது.டிரெய்லர் மிகப் பெரிய அலையை ஏற்படுத்தியுள்ளது. படம் பற்றி நிறையக் கருத்துக்கள் வருகிறது. படம் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும். அதன் பிறகு கருத்துச் சொல்லுங்கள். இப்படம் முடித்துவிட்ட பிறகு சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெரிய ஆதரவாக வந்தார்கள் அவர்களுக்கு என் நன்றிகள்…” என்றார்.

சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன் பேசும்போது, “இயக்குநர் விக்னேஷுடன் இணைந்து திட்டம் இரண்டு படத்தை நாங்கள் தயாரித்தோம். ஒரு போல்டான கருத்தை பொறுப்புடன் கையாள்வார். படத்தின் டிரெய்லர் பார்த்து எதுவும் நினைக்க வேண்டாம், படம் பாருங்கள். எல்லோருக்கும் பிடிக்கும். எல்லா நடிகர்களும் மிகத் தைரியமாக நடித்துள்ளார்கள். படத்திற்கு ஆதரவு தாருங்கள்..” என்றார்.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் பேசும்போது, “படத்தில் வேலை பார்த்த அனைவரும் மிகவும் அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். படத்தின் வெற்றி விழாவில் இன்னும் நிறையப் பகிர்ந்து கொள்கிறேன் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

படத்தொகுப்பாளர் முத்தையா பேசும்போது, “இப்படத்தின் டிரெய்லர் உங்களுக்குள் பல கேள்விகளை எழுப்பியிருக்கும், அந்த கேள்விகளுக்குப் பதில், மார்ச் 29-ல் கிடைக்கும். இப்படத்தில் வாய்ப்பு தந்த விக்னேஷ் அண்ணாவிற்கு நன்றி. இந்தப் படம் மிக போல்டான படம், படம் பாருங்கள். உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும்..” என்றார்.

இசையமைப்பாளர் வான் பேசும்போது, “இது என் முதல் மேடை. விக்னேஷ் அண்ணாவிற்கு நன்றி. இந்தப் படம் மிக போல்டான கதை, இதை செய்வது மிக கடினம். விக்னேஷ் மிகத் தைரியமாக இயக்கியுள்ளார். படம் பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும் நன்றி..” என்றார்.

நடிகர் சுபாஷ் பேசும்போது, “இந்தப் படம், எனக்குத் திட்டம் இரண்டு படத்திற்குப் பிறகு மிக முக்கியமான படமாக இருக்கும். விக்னேஷ் பிரதருக்கு நன்றி. டிரெய்லர் பார்த்து நிறையக் கேள்விகள் தோன்றும். ஆனால் படம் வந்த பிறகு அது எல்லாம் புரிந்து விடும். எல்லா நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி..” என்றார்.

நடிகை அம்மு அபிராமி பேசும்போது, “என்னை இந்தக் கதாப்பாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்த விக்னேஷ் அவர்களுக்கு நன்றி. முதலில் கதையை கேட்டபோது மிகவும் பயந்தேன், திட்டம் இரண்டு பார்த்த பிறகுதான் அவரின் கதை சொல்லும் முறை எனக்குப் புரிந்தது. என்னுடைய கதாபாத்திரம் மிக நன்றாக வந்துள்ளது. மற்ற கதைகள் எனக்குத் தெரியாது. ஆனால், விக்னேஷ் மீது நம்பிக்கை இருக்கிறது. படத்தைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். படத்தை மக்களிடம் கொண்டு சேருங்கள். அனைவருக்கும் என் நன்றிகள்..” என்றார்.

நடிகர் ஆதித்யா பாஸ்கர் பேசும்போது, “ஒன்றரை வருடங்கள் முன்பாக இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை என்னிடம் தந்தார்கள். எப்போது இது நடக்கும் என ஆவலாக இருந்தேன். என்னை இப்படத்தில் தேர்ந்தெடுத்த இயக்குநருக்கு நன்றி. இந்தப் படம் மிகவும் போல்டான கதை, இந்தப் படத்தைப் பத்திரிக்கையாளர்கள் புரிந்துகொண்டு ஆதரவு தர வேண்டும், படத்தில் எங்கும் உங்கள் முகம் சுழிக்கும்படி எதுவும் இருக்காது. கலையரசனின் ரசிகன் நான். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இப்படம் பார்த்தபிறகு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் நன்றி..” என்றார்.

நடிகர் கலையரசன் பேசும்போது, “இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானபோதே திரையுலகிலிருந்து, பலர் போன் செய்து திட்டினார்கள். ஆனால் முழுப் படமும் பார்த்தால்தான் உங்களுக்கு இதன் அர்த்தம் புரியும். விக்னேஷ் கதை சொல்லும்விதம் மாறுபட்டு இருக்கலாம். ஆனால், அது சென்று சேரும் இடம் சரியாக இருக்கும். என் கதை மட்டும்தான் எனக்கு தெரியும். ஆனால் விக்னேஷ் பிரதர் மீது நம்பிக்கை இருக்கிறது. யுவர்ஸ் ஷேம்ஃபுலி எனத் தொடர் எடுத்தார். அதுவும் இந்த மாதிரி, அலைகளை ஏற்படுத்தியது. ஆனால் அது முடியும்போது மிக அழகாக நம்மைச் சிந்திக்கும்படி செய்யும். அதே போல் இந்தப் படமும் இருக்கும். படம் பாருங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி..” என்றார்.இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசும்போது, “இந்த ஹாட் ஸ்பாட் படத்தை என் நண்பர்கள்தான் தயாரித்துள்ளனர், என் மீதான நம்பிக்கை மட்டும்தான் காரணம் அவர்களுக்கு நன்றி.

இந்தப் படத்தில் நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர், எல்லோரும் கதையை நம்பி மட்டுமே வந்துள்ளனர். எல்லோரும் அருமையாக நடித்துள்ளனர். யுவர்ஸ் ஷேம்ஃபுலி எனத் தொடர் எடுத்தேன். அது ஏற்படுத்திய எதிர்வினைகளைத்தான் இந்தப் படமும் ஏற்படுத்தும் என நம்புகிறேன். தப்பான கருத்தைச் சொல்லிவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமுடன் வேலை பார்த்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும். நன்றி…” என்றார்.

வரும் மார்ச் 29-ம் தேதி இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

சிக்ஸர் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன், இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.