புத்தம் புதிய கதைக்களத்துடன் உருவாகும் ‘கலியுகம்’!

மிழ் சினிமாவில் புத்தம் புதிய கதைக்களத்துடன் இளம் இயக்குநர்கள் அறிமுகமாகி வருகிறார்கள். இதனை சமீபமாக வரும் திரைப்படங்களில் காணமுடிகிறது.  அந்த வரிசையில் அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கும் ‘கலியுகம்’ தயாராகிவருகிறது. இந்தப் படதில் நடிகர் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவிருக்கிறார்.

பேரழிவுக்கு பிந்தைய உலகம் எப்படியிருக்கும் என்ற மையக்கருத்தைக் கொண்ட களமாக இந்தப் படம் உருவாகிறது. ‘கலியுகம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ப்ரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ். ராமகிருஷ்ணா பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார். ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு 2021- ஆண்டு ஜனவரியில் தொடங்க்கப்படுவதாக கூறியுள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம்:  ஆர்.கே இண்டர்நேஷனல்
தயாரிப்பாளர்:  ப்ரைம் சினிமாஸ் உரிமையாளர் கே.எஸ்.ராமகிருஷ்ணா
இயக்குநர்:  பிரமோத் சுந்தர்
ஒளிப்பதிவாளர்:  ராம்சரண்
பி.ஆர்.ஓ – யுவராஜ்

முழுக்க முழுக்க இளம் படைப்பளிகளைக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
காட்சியமைப்பு, கதைக்களம் என அனைத்திலும் புதுமையைக் கொண்டுவரவுள்ள இந்தப் படம் கண்டிப்பாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்கிறார்கள் படக்குழுவினர்.

-யாழினி சோமு

Related Posts